Wednesday, January 28, 2009

நன்றி யூதனே!

courtesy : http://warmcall.blogspot.com/
யூத அரக்கனுக்குஇதயம் இருக்குமோ? யுத்த இருள் நீங்கஉதயம் பிறக்குமோ?
மானுடம் உலகில்மாண்டு விட்டதோ?

இல்லை…மாபாதகம் உலகைஆண்டு விட்டதோ?

ஆக்கிரமிப்பு என்றார்…அமோக வரவேற்பு!
விடுதலை என்றோம்…வெண் பொசுபரசு குண்டுகள்!
அழிப்போம் என்றார்…சாட்டுப் பேசினர்!
அமைதி என்றோம்…‘வீட்டோ’ வீசினர்!

மழலைகள் மடிந்தன என்றோம்…இஸ்ரேல் மதில்களும் இடிந்தன என்றார்!மானிடன் ஆத்மா என்றோம்…இரண்டுமெ குற்றங்கள் என்றார்!

முஸ்லிமே!
முதல் கிப்லா தகர்ந்தது…ஹரத்தில் கஃபா என்றோம்!
முஸ்லிம்கள் கதறினர்…எல்லைக்கு வெளியே என்றோம்!
வாழ வழி கேட்டார்…பாதையை வழி மறித்தோம்!
மீட்க படை கேட்டார்…முகாமில் பூட்டி வைத்தோம்!

ஆக்கிரமிப்பை எதிர்த்தார்...‘ஜிஹாத்’ அபத்தம் என்றோம்!
கலீபா எங்கே என்றார்...பழங்கதை எதற்கு என்றோம்!

தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!
இறை நேசர்களைசிறைக்குள் அடைத்தோம்!
பொது எதிரியைஇமயமாய் வளர்த்தோம்!
தூய தியாகிகளைதூக்கிலே போட்டோம்!
வீர வரலாற்றைவீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்! அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!
பேசிய தீர்விலேஇஸ்லாம் இருந்ததா? வீசிய பொதிகளில்விமோசனம் கிடைத்ததா?

முஸ்லிமே!
இனியொருமுறை போசோம்!!!
பேசோம்! பேசோம்!!
இனியொருமுறை போசோம்!!!
இனிப்பேச்சு புதுமொழியில்…ஒரே அணியின் பொறிமுறையில்…

முஸ்லிமே!
தாகூத்தை வெட்டி வீழ்வோம்…
உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…
கிலாபத்தை எட்டி மீள்வோம்…
ஷஹாதத் கொடி நட்டி ஆழ்வோம்…
இன்ஷா அல்லாஹ்…

Tuesday, January 27, 2009

உள்ளங்களை இணைக்கும் உணவு

( பாசம் பொங்க, முழுமையாக படியுங்கள். அற்புதமான கட்டுரை )
புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன் உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள். குழந்தைக்காக ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்கி, எதிலெல்லாம் என்னென்ன சத்து இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை ருசியோடு சமைத்துக் கொடுக்கிறாள்.
என்னதான் சத்து இருந்தாலும், எவ்வளவுதான் அது சுவையாக இருந்தாலும் ''இதோ சமைத்து வைத்திருக்கிறேன். எடுத்து சாப்பிடு'' என்று தாய் கூறுவதில்லை. சாப்பிடுவதற்கான சூழ்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவை குழந்தைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிலாவைக்காட்டி, பறவைகள்-பிராணிகளைக் காட்டி, பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி தாய் உணவூட்டுகிறார். இது தாய்மையின் இன்றியமையாத பண்பு.
வீடு எதனால் அமைக்கப்பட்டது? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், செங்கல், சிமெண்ட், இரும்பு... என்ற கட்டுமானப் பொருட்களால் ஆனது என்று பதிலளித்தால், பதில் சரி. ஆனால் அவை அனைத்தும் உயிரற்றவை. அன்பு என்ற உயிர் அதனுள் இருந்தால் மட்டுமே வீடு வீடாக அமையும். இல்லாவிட்டால் கல்லறைக்கும்-வீட்டிற்கும் வித்தியாசம் இருக்காது. இப்போது பெரும்பாலான வீடுகள், நவீன சவுகரியமான கல்லறைகள் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன.
உணவு எதனால் அமைகிறது? என்ற கேள்வியைக் கேட்டால், ''பிரியாணியில் இந்தெந்த பொருட்கள் எல்லாம் சேர்கிறது. ஜாங்கிரியில் இந்தெந்த பொருளெல்லாம் சேர்க்கப்படுகிறது'' என்பது அதற்கான தத்துவார்த்தமான பதில் அல்ல. இத்தனை பொருட்களையும் கலந்தால் ஒரு உணவு தயாராகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அந்த உணவு சரியான நேரத்தில், சரியான சூழலில் அன்போடும், பாசத்தோடும் பரிமாறப்பட வேண்டும். அப்படியானால்தான் உடலுக்கும், மனதுக்குக்கும் பலன் தருவதாக அந்த உணவு அமையும்.
வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது.
குழந்தை பசிக்கிறது என்று தாயிடம் சொன்னாலும், ''அப்பா வரட்டும். அது வரை பொறுத்திருப்போம்'' என்று தாய் காத்திருப்பார். குழந்தை பசிக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் தனது பசியையும் தாயார் உணர்ந்திருக்கவே செய்வார். அதே பசி கணவருக்கும் இருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். கணவர் என்ற ஒருவருக்காக தானும், குழந்தையும் பசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும் பசியை போக்குவது மட்டுமே உணவின் நோக்கம் அல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதுதான் உணவின் முழுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்று தாய்மார்கள் நம்பினார்கள்.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.
மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ''இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க...'' என்பாள்.
எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..''' என்று பதிலுக்கு கணவர் சொல்வார்.
அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..'' என்பான், மகன்.
இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.
ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது... எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது.
பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்.
இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்?
18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர்.
மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர்.
நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது.
ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் ''பேம்லி மீல்ஸ்'' திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக்க இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள் டீன்ஏஜினர். இந்த இளம்பருவத்தினர்தான் உணவில் அதிக அளவில் அலட்சியமாக இருந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உணவருந்துவதே தேவையா என்ற கேள்வியுடன் இவர்கள் இருந்து கொண்டிருப்பதால், சாப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமும் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இவர்கள் சமச்žரான சத்துக்கள் கொண்ட உணவை, சரியான நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும்.
இளம் பெண்களிடம் ''பிரேக் பாஸ்ட் ஸ்கிப்பிங்'' என்ற காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கல்லூரி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு ''நவீன கால நாகரீகம்'' போல் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் இன்று நாளை அல்ல... பிற்காலத்தில்தான் முழுமையாகப் புரியத் தொடங்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவர்களும் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள்.
ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.
பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருகும்

Tuesday, November 25, 2008

மன்மோகன் சிங் : நவீன தருமன் - ரஹீம்

மன்மோகன் சிங் : நவீன தருமன்
Written by · ரஹீம் புதிய ஜனநாயகம் Wednesday, 05 November 2008
"நல்ல காலம் முடிந்தது'' இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.
பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.
அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும் ""பிளாக் மெயில்'' செய்கிறார்கள். முதலாளிகளின் மிரட்டலுக்கு ஆடிப் போன மன்மோகன் ப.சிதம்பரம் கூட்டணி 1,85,000 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டுகிறது.
மனசாட்சியோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான்; பல இலட்சக்கணக்கான விவசாயிகள் தாராளமயத்தால் ஓட்டாண்டியாகி, விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த பிறகுதான், மன்மோகன் சிங் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அரைகுறை திட்டத்தை அறிவித்தார்.
இப்பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு முதலாளியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவில்லை; எந்தவொரு முதலாளியும் ஓட்டாண்டியாகித் தெருவுக்கு வந்துவிடவில்லை. ஆனாலும் கடந்த அக். 6 தொடங்கி அக்.20க்குள், இரண்டே வாரத்திற்குள் 1,85,000 கோடி ரூபாய், முதலாளிகள் வாரிக் கொள்ளும்படி சந்தையில் கொட்டப்பட்டது. இது, மன்மோகன் சிங்கின் சொந்தப் பணமோ, முதலாளிகளின் அப்பன் வீட்டுச் சொத்தோ அல்ல. இந்த 1,85,000 கோடி ரூபாயும் இந்திய மக்களின் சேமிப்புப் பணம்; மக்கள் அரசாங்கத்திற்கு வரியாகக் கட்டிய பணம்.
இந்திய முதலாளிகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள கருப்புப் பணம் மட்டும் 55 இலட்சம் கோடி ரூபாய் என்றும்; கருப்புப் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்குவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன (தினமணி 16.10.2008) மன்மோகன் சிங் இந்தக் கருப்புப் பணத்தை முடக்கினால், பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள "நட்டத்தை' மட்டுமல்ல, இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கடன்களைக் கூட அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். ஊழல்வரி ஏய்ப்பின் மூலம் குவிக்கப்பட்ட இந்தக் கருப்புப் பணத்தின் மீது கை வைக்கத் தயங்கும் மன்மோகன், பொதுமக்களின் சேமிப்பைப் பங்குச் சந்தை சூதாடிகளுக்காக வாரியிறைக்கிறார்.
மாணவர்களுக்குக் கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்; சிறு தொழில்களுக்கு உரிய நேரத்தில் உதவ மறுக்கும் வங்கிகள்; விவசாயக் கடன் தர மறுக்கும் வங்கிகள், பங்குச் சந்தைச் சூதாடிகளைக் காப்பாற்ற வட்டியைக் குறைத்து, தங்கள் கஜானாவைத் திறந்து வைத்துவிட்டன.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க முதலாளிகளைக் கைதூக்கி விட 70,000 கோடி அமெரிக்க டாலர் பெறுமான மானியத் திட்டத்தை அறிவித்த பொழுது, அதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது. மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கும்பலோ, 1,85,000 கோடி ரூபாய் மானியத்தை வாரிக் கொடுக்க, யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பொழுது, அதனால் வங்கிகள் நட்டமடையும் எனக் கவலைப்பட்ட பொருளாதார நிபுணர்கள்; அத்திட்டத்தை ஓட்டுவங்கி அரசியல் எனக் கிண்டலடித்த நடுத்தர வர்க்கக் கனவான்கள், முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மானியம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏதோ நாட்டு நலனுக்காகத்தான் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதைப் போலச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
பங்குச் சந்தை வளர்ச்சி 20,000 புள்ளிகளாக ஊதிப் பெருத்திருந்தபொழுது, முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு மதிப்பு 62,16,900 கோடி ரூபாயாக வீங்கியிருந்தது. இந்தச் சரிவினால், இந்தச் சந்தைத் திரட்சி சரிபாதியாக வீழ்ந்து விட்டது. இதனால், அம்பானி, மிட்டல் போன்ற உலகக் கோடீசுவரர்களின் சொந்த சொத்து மதிப்பும் படுத்துவிட்டது. மீண்டும் பங்குச் சந்தை வீங்கினால்தான் இவர்களின் சொத்து மதிப்பு உயரும். அதற்குத்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் பயன்படும். வீட்டுக் கடன் மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கைகளுக்கும்; நுகர்பொருள் கடன் மூலம் மேட்டுக்குடி ஊதாரிக் கும்பலின் பாக்கெட்டுக்கும்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் செல்லப் போகிறது.
மாறாக, பங்குச் சந்தை வளர்ச்சியின் கவர்ச்சியில் மயங்கி, அதில் பணத்தைப் போட்டு, 3,00,000 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்து ஆசாமிகளுக்குக் கூட இந்தப் பணம் உதவப் போவதில்லை.
···
பங்குச் சந்தையை சேவைத் துறை எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த மன்மோகன் சிங், இன்று அதனைச் சூதாட்டப் பொருளாதாரம் எனச் சொல்லும் அளவிற்கு இடிந்து போய் நிற்கிறார். "பங்குச் சந்தை சூதாட்ட பேர்வழிகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய அளவில் கண்காணிக்கும் நிர்வாக அமைப்புகள் தேவை'' என சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாட்டில் உபதேசம் செய்திருக்கிறார்.
இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் காரணம் என முதலாளித்துவப் பத்திரிகைகள் கூடக் குற்றஞ் சுமத்துகின்றன. அந்நிறுவனங்கள் 1,000 கோடி டாலர் பெறுமான பங்குகளைத் திடீரென விற்று, இலாபத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போனதால், பங்குச் சந்தை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து விட்டது. மன்மோகன் சிங், இந்த வெளியேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ பங்குச் சந்தை சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், மேலும் பல சலுகைகளை வாரியிறைத்து வருகிறார்.
ஒருவர், தான் இன்னார் எனக் காட்டிக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பங்கேற்புப் பத்திரம் என்றொரு வசதி இருக்கிறது. கருப்புப் பணத்தை நல்ல வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் குறுக்கு வழி இது. இந்தியாவின் கருப்புப் பண முதலைகள், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் சூதாடுகிறார்கள் என மோப்பம் பிடித்துவிட்ட பங்குச் சந்தை பரிமாற்ற வாரியம், இந்தக் குறுக்கு வழியை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியது. மன்மோகன் சிங் இத்தடைக்கு ஒத்துக் கொள்ளாததால் அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்யும் முதலீட்டில், பங்கேற்புப் பத்திரங்கள் 40 சதவீத அளவிற்குள்தான் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுதோ, பங்குச் சந்தை சரிவைத் தடுத்து நிறுத்துவது என்ற பெயரில், இக்கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டு, கருப்புப் பணப் பேர்வழிகளின் முதலீட்டுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவரது உபதேசம் ஊருக்குத்தான் போலும்!
···
பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்திய நிதி சந்தை முழுவதையும் அந்நிய நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் மன்மோகன் சிங் கும்பலின் இலட்சியம். அந்நிய நிதி நிறுவனங்கள் காப்பீடு துறையில் 26 சதவீதம் அளவிற்கு மூலதனம் இடுவதை அனுமதித்திருக்கும் மன்மோகன் சிங், அதனை 49 சதவீதமாக உயர்த்த விரும்புகிறார்.
இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளைப் பன்னாட்டு பகாசூர வங்கிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வசதியாக, அந்நிய வங்கிகள் இந்திய வங்கிகளில் மூலதனமிடுவதை 74 சதவீதமாக உயர்த்தவும்; இதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது, காங். கூட்டணி ஆட்சி.
தொழிலாளர் சேமநல நிதியை நிர்வகிப்பதை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கி, அந்நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டிச் சூதாடுவதைச் சட்டபூர்வமாக்குவதற்காக சேமநல நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையத்தை நிறுவ சட்டம் தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.
மன்மோகன் சிங்கால் நிதித்துறை தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு "சீர்திருத்தமும்'' வாடிக்கையாளர் நலனுக்கானது அல்ல; அரசின் அரைகு றைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதித்துறையை, அமெரிக்காவைப் போல நிதி ஆதிக்கக் கும்பலிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கமுடையது. பூனைக்கு மணிகட்ட வேண்டும் என்றால், மன்மோகன் சிங் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். ஆனால், அவரது சிஷ்யப் பிள்ளை ப.சிதம்பரமோ, அமெரிக்காவின் தனியார் வங்கிகள் திவாலானதைப் பார்த்த பிறகும், "இந்திய நிதித்துறையைச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடை போட முடியாது'' எனத் திமிராக அறிவிக்கிறார்.
அமெரிக்காவின் வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு, இந்தியப் பொதுத்துறை வங்கிகள் 450 கோடி ரூபாயும்; இந்தியத் தனியார் வங்கிகள் 2,100 கோடி ரூபாயும் இழந்துவிட்டதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது அரைகுறை உண்மைதான் என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்திய வங்கிகள் வகைதொகையின்றி அளித்திருக்கும் கிரெடிட் கார்டு கடன்கள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள் ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்க பாணியில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என வல்லுநர்களே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, தகவல்தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் வேலையிழப்பும், சம்பள வெட்டும் வங்கிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மேலும், இந்தியப் பணத்தின் சந்தை மதிப்பை அரசின் தலையீடின்றி, சூதாடிகள் தீர்மானிக்க விட்டு விடவேண்டும் என்பதுதான் மன்மோகனின் வாழ்நாள் இலட்சியம். ஒருவேளை அவரது கனவு முன்பே நிறைவேறியிருந்தால், இந்நேரம் இந்தியா திவாலாகியிருக்கும். கட்டுப்பாடு பற்றி உபதேசிக்கும் மன்மோகன் சிங், தனது இந்தக் கனவைக் கைகழுவிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
···
இந்தியா, அமெரிக்கா போல மாற வேண்டும் எனக் கத்திக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்துக்கு, இந்த ""நெருக்கடி'' சரியான பாடம் புகட்டிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் கொழுத்த சம்பளத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் சீமா குக்ரேஜாவை, அவரது நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, வேலை நீக்க உத்தரவில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 1,900 ஊழியர்கள் ஒரே நொடியில் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் போராடிய பிறகு, ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயல் அவர்களைத் ""தாயுள்ளத்தோடு'' வேலைக்கு எடுத்துக் கொண்டார். இந்தக் கருணைக்குப் பின்னே சம்பள வெட்டு என்ற குருவாள் மறைந்திருந்தது. இரண்டு இலட்சம் வரை சம்பளம் வாங்கிய தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு இன்று 10,000 ரூபாய் சம்பளமாகக் கிடைத்தால் அதிருஷ்டம்தான்! வேலை பறி போய்விடும் என்பதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் யாரும் வருடாந்திர சம்பள உயர்வு பற்றியோ, போனசு பற்றியோ வாயே திறப்பதில்லை எனக் கூறப்படுகிறது. சம்பள வெட்டு, இல்லையென்றால் வேலையிழப்பு இந்த இரண்டில் ஒன்று ஊழியர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
தெருவில் இறங்கிப் போராடும் தொழிலாளர்களை, "நான்சென்ஸ்'' என எரிச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தெருவில் இறங்கி "வாழ்க, ஒழிக'' முழக்கம் போட வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது. தொழிற்சங்கத்தில் சேர்வதை கௌரவக் குறைச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தங்களுக்காக யாராவது பரிந்து பேச மாட்டார்களா எனத் தவிக்கிறார்கள். தாராளமயத்தால் இவர்கள் அனுபவித்த வசதிகள் கிரெடிட் கார்டு, வண்டிக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை இன்று வேலையிழப்பாலும், சம்பள வெட்டாலும் சுமையாக மாறி, அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. நிரந்தரமானது என அவர்கள் நம்பிக் கொண்டிருந்த இந்த சொர்க்க வாழ்க்கை, இன்று நொறுங்கி விழுகிறது.
நெருக்கடியில் சிக்கிக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் தர வேண்டிய 3,000 கோடி ரூபாயை மெதுவாக அடைக்கலாம் என கருணை காட்டியிருக்கிறார், மன்மோகன் சிங். அதேசமயம், ஏர்இந்தியாவில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள 15,000 ஊழியர்களுக்குக் கருணை காட்ட அரசு தயாராக இல்லை. இதுதான் அமெரிக்க பாணி; தொழிலாளர்களை வேலையில் இருந்து கறிவேப்பிலை போலத் தூக்கியெறிவதுதான் அமெரிக்காவின் தொழில் உறவுக் கொள்கை. இந்தத் தீவட்டிக் கொள்கையைத்தான் தொழிலாளர் நலச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமலாக்கத் துடிக்கிறார், மன்மோகன் சிங்.
தனியார்மயம் சூதாடிகளைத் தவிர, உழைக்கும் மக்களில் எந்தவொரு பிரிவினருக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஊழியர்கள், இடைநிலை அதிகாரிகள் குறைந்தபட்ச வாழ்க்கை பாதுகாப்பையோ, வேலை பாதுகாப்பையோ அளிக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது. இச்சூதாட்டப் பொருளாதாரத்தை, அமைப்பாகத் திரண்டு போராடி வீழ்த்துவதை விட்டுவிட்டு, விதியே என்று நமது தலையில் சுமப்பது இனியும் அறிவுடைமையாகாது!

Wednesday, November 19, 2008

இது, கொஞ்சம் ஓவர் தான்! - எஸ். அர்ஷியா

தன் முதுகை தன் கையாலேயே தட்டிக்கொள்ளச் செய்யும் 'நல்லவர்' அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கையில் கொடுத்துவிட்டார்.அந்த விசாரணைக் கமிஷனை நியமிக்கும் போது, மோடி தன் மனதுக்குள் என்ன நினைத்து அமைத்தாரோ... அதுவே நடந்துவிட்டிருக்கிறது.அசுர குணம் கொண்ட ஓர் மனிதனை, 'அய்யோ பாவம். அவர் அப்பாவியாக்கும்!' என்று வா¢ந்து கட்டி நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் அந்த அறிக்கை, 'குஜராத் ரயில் எ¡¢ப்பு சம்பவம் முஸ்லிம் மத போதகர் மெளலானா உமர்ஜியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் செயல்' என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளது.நாடு முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து, தேசத்திற்கு பெருமையையும், உலக நாடுகளிடம் அன்பையும் பெற்ற(?) சங் பா¢வார அமைப்புகள், இந்த அறிக்கையால் மேலும் மகிழ்ந்து போயிருக்கின்றன. காவிக் கொடிகள் சிலுசிலுத்துப் பறக்கின்றன.இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களின் சொத்துகளையும் தீ வைத்துக் கொளுத்தியவர்களுக்கு, 'ஊருவிட்டு ஊரு வந்து உழைத்துப் பிழைத்த, 'பெஸ்ட் பேக் கா¢'யின் ஊழியர்களை, கதவைப் பூட்டி எ¡¢த்துக் கொன்றவர்களுக்கு, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற் றைக் கிழித்து, குறைமாதக் கருவை வாள்முனையில் உருவியெடுத்து, 'ஒரு முஸ்லிம் கூட உயிரோட இருக்கக் கூடாது' என்று கொக்கா¢த்தவர்களுக்கு, கைக்கூப்பிக் கும்பிட்டு உயிர்ப்பிச்சைக் கேட்ட நபரை ஈவுயிரக்கமின்றி வெட்டிக்கொன்று குதூகலித்தவர்களுக்கு, இந்த அறிக்கை துளிக்கூட சங்கடத்தைக் கொடுக்கவில்லை. மாறாக ¨தா¢யத்தையும், இனி எதையும் செய்யலாம் என்ற துணிச்ச லையும் தான் கொடுத்துருக்கிறது.பொய்ப் புனைந்துரைகளைக் கொண்ட இந்த அறிக்கை வெளியானவுடன், காவிகளின் சலசலப்பும், கொக்கா¢ப்பும் கூடியிருக்கிறது.அதை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வாயாலேயே கேட் போம். 'இறுதியில் உண்மை வெளிவந்துவிட்டது. பொது மக்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளியிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மீதும், முதல்வர் நரேந்திரமோடி மீதும் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யென உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை சா¢ என்று நிரூபணமாகியிருக்கிறது. அந்த சம்பவம் தீ விபத்து அல்ல. திட்டமிட்ட வன் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி, நானாவதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டுமென வற்புறுத்துவோம். லாலு பிரசாத் யாதவால் நியமிக் கப்பட்ட யூ.சி.பானர்ஜி கமிஷனின் அறிக்கை, அரசியல் வன்மம் கொண்டது. அரசியல் நிர்பந்தங் களால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அறிக்கை அது. அதன் பின்னணியில் பெரும் அழுத் தங்களும் தலைகளும் உள்ளன. சங்பா¢வாரங்கள் அப்பழுக்கற்றவை' என்று வர்ணித்திருக்கிறார்.தீப்பந்தத்தால் தலையைச் சொறிந்து கொள்பவர்களால் மட்டுமே, இப்படி பிதற்ற முடியும். காவி களுக்கு, இது கைவந்தக் கலை!கடந்த 2002 ம் ஆண்டு பிப்ரவா¢ மாதம் 27 ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கு உள்ளாகிறது. அந்த ரயிலின் எஸ் - 6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 58 பேர் உயிரிழக்கிறார்கள்.இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத் ஆகிய சங் பா¢வாரங்கள் வன்முறையில் இறங்குகின்றன. முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து கள் அழிக்கப்படுக்கின்றன.அனாதரவானவர்கள் அபயம் தேடி போலிஸ் நிலையங்களுக்கு ஓடுகிறார்கள். அங்கிருப்பவர்கள் அரசு விசுவாசத்துக்கு ஆளாகி, உள்ளே வந்தவர்களை வெளியே அனுப்பி வைக்கிறார்கள். `உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்` என்று உன்மத்தமாய் அறிவுரைக் கூறி வெளியேற்றுகிறார்கள்.அப்போது மாநில முதல்வர் நரேந்திர மோடி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதனால் சங் பா¢வார அமைப்புகள் வன்முறையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போயின. அதைக் கட்டுப்படுத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயி யும் முயற்சிக்கவில்லை எனும் குற்றச்சாட்டும் உலகளவில் உள்ளது.வன்முறைக் கும்பலுக்கு இந்த செய்கைகள் மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே கட்டுப் பாடற்றவர்களாக வளைய வந்தவர்கள் அவிழ்த்துவிடப்பட்ட மிருகங்களாக தெருக்களில் அலைகிறார் கள். அஹிம்சையை போதித்த மகாத்மாவின் மாநிலம், ஹிம்சைகளின் தலைநகராகிறது.அதிர்ந்து போன பொது மக்கள், நீதி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உலக நாடுகளில் உள்ள நலம்விரும்பிகள் மத்திய அரசைத் தலையிடச் சொல்லி வற்புறுத்துகின்றன. கவிமனம் நிறைந்த பிரதமர் வாஜ்பாயி கல்மனம் கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்ட சந்தர்ப்பத்தை நாட்டிற்கு தருகிறார்.மோசமாக வளர்ந்து வரும் மோடியை எதிர்த்து அரசியல் செய்ய ஆர்.எஸ்.எஸ்சால் கைகள் கட்டப் பட்டிருந்த வாஜ்பாயி, குடியரசுத் தலைவா¢ன் தலையீட்டின்போ¢ல் துயில் கலைகிறார். தேசம், தலை குனிந்து நின்றது.உலகமே உற்றுப் பார்த்த அந்த சம்பவங்களை விசா¡¢க்க மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவை நியமிக்கிறார். ஆடுகளின் குறைகளைக் கேட்க, ஓநாய் ஒன்று வருகிறது.சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதாகச் சொல்லி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனின் நீதிபதி கே.ஜி.ஷா, சரமா¡¢யாக முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து விடுகிறார். இதைத்தானே மோடி எதிர்பார்த்தது.அவரது சினிமாத்தனமான மானாவா¡¢ அதிரடித் தீர்ப்புகளால் நீதித்துறையே திக்குமுக்காடிப் போனது. அதன்பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு, அவரது தீர்ப்புகளில் பலவற்றைப் பா¢சீலித்து, பலரது உயிரைக் காப்பாற்றியது.நீதித் துறையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவின் 'தாம் தூமில்' அதிர்ந்து, தலைமையை மாற்றச் சொல்லி வற்புறுத்தின. இக்கட்டுக்குள்ளான குஜராத் மாநில மோடி அரசு, காவிப் பின்னணி கொண்ட மற்றொரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி. நானாவதியைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அவரை முதன்மையாகப் போட்டு, கமிஷன் நடந்து வந்தது.ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி கே.ஜி.ஷா, கடந்த மார்ச் மாதம் மூப்படைந்து உயி¡¢ழக்க... அவரது இடம் மற்றும் ஒரு காவிப்படையின் ஆதரவு பெற்ற குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அக்ஷய் மேதாவால் நிரப்பப்பட்டது.அந்த இருவரும் ஆறாண்டுகளும் ஆறுமாதங்களும் ஓய்வில்லாமல் விசா¡¢த்த(?) தகவல்களின் அடிப்படையில், அறிக்கையின் முதல் பகுதியை 2008 செப்டம்பர் 25 ம் தேதி சமர்ப்பித்து விட்டனர்.விசாரணையின்போது, நரேந்திர மோடிக்கும், குஜராத் அரசுக்கும், மாநில போலிசுக்கும் எதிராகச் சொல்லப்பட்ட சம்பவங்கள் எதையும் பதிய, அக்குழு மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன.ஆயிரத்துக்கும அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில்(?) 168 பக்கங்களைக் கொண்டு தயா¡¢க்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், முதல்வர் நரேந்திர மோடியிடம் வழங்கிய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி.நானாவதி,' அந்த சம்பவத்தின் முதல் பகுதி அறிக்கையை முதல் கட்டமாகத் தாக்கல் செய்திருக்கிறோம். அடுத்தக் கட்ட அறிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிக்க முயலுவோம். அதில், சம்பவத்தின்போது போலிஸ் நடந்து கொண்ட முறை, அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெறும். தேவைப்பட்டால், மூன்றாவது கட்ட அறிக்கை தயா¡¢ப்பிலும் ஈடுபடுவோம். இது ஒரு வித்தியாசமான கமிஷன். நீதி விசாரணைக்குழு இல்லை. அதேவேளையில் உண்மை கண்டறியும் அமைப்பாகும்!' என்று, தன் முதுகிலும் தானே தட்டிக் கொள்கிறார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, 'இதில் துளிக்கூட சம்பந்தம் இல்லை' என்று வலிந்து சொல் லும் அந்த அறிக்கை, முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள் ளது. சம்பவத்தின் முதல் நாளிரவு அவர் 140 லிட்டர் பெட்ரோலை சேகா¢த்து வைத்து, அடுத்த நாள் சம்பவத்துக்கு பயன்படுத்தினார்.எஸ். - 6, எஸ். - 7 பெட்டிகளின் கதவுகளை ஹஸன் லாலா என்பவர் வலுக்கட்டாயமாகத் திறந்து, உள்ளே தீப்பந்தங்களை வீசினார் என்று முடிவுக்கு வருகிறது.அதேவேளையில், 'மாநில முதல்வர் நரேந்திர மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ, அல்லது போலிஸ் ஆகியோ¡¢ன் பங்கு இந்த சம்பவத்தில் துளிகூட இல்லை. அவர்கள் எடுத்த நடவ டிக்கைகளில் எந்த இடத்திலும் குறைபாடுகள் தென்படவில்லை' என்றும் முழு பூசணிக்காயை உள்ளங்கைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது, அந்த அறிக்கை!குஜராத் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்திவரும் `மக்களுக்கான பொது நீதி` அமைப்பின் இயக்குநர், டீஸ்டா செதல்வாட், 'அப்போதைய ஆளும் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தை பூசி மறைக்கும் இந்த அறிக்கை, வரப் போகும் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. மோடி என்ன நினைத்திருக்கிறாரோ... அதுவே அறிக்கையாக வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் குஜராத் வன்முறை சம்பவம் குறித்து விசா¡¢க்க, ராகவன் கமிட்டியை அமைத்திருக்கிறது. அதன் அறிக்கை டிசம்பருக்குள் வரவிருக்கிறது. அதற்கு முன் என்ன அவசரம் என்று தொ¢யவில்லை!' என்கிறார்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் பதவியேற்றதும் அதன் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ், கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிந்த சம்பவத்தை ஆராய யூ.சி.பானர்ஜி கமிட்டியை அமைத்தார். தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்த அந்தக்குழு, 'அது ஒரு விபத்து. பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது போல சம்பவ இடத்தில் முஸ்லிம் கும்பல் எதுவும் கோத்ரா ரயில் நிலையத்தில் இருக்கவில்லை!' என்று அறிக்கையை சமர்ப்பித்தது.மத வாத அமைப்புகள் தவிர மற்ற எல்லோராலுமே வரவேற்கப்பட்ட அந்த அறிக்கை, நாடாளு மன் றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று, முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலால் கட்சிக்காரர் ஒருவரால் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கப்பட்டது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, வேறுகதை!நானாவதி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டும் முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியின் மகன் சாயித் உமர்ஜி, 'சம்பவம் நடந்த ஓராண்டுக்குப் பின் என் தந்தையை போலிஸ் கைது செய்து கொண்டு போனது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உள்ளூர் போக்கி¡¢ ஒருவன் தந்த தகவலின் போ¢ல், கைது செய்யப்பட்ட என் தந்தையை சம்பவத்துக்கான மூலக் காரணம் என்று, பின்பு குற்றம் சாட்டி வழக்கை ஜோடித்தனர். இந்த அறிக்கை ஒரு தரப்பானது!' என்கிறார்.நானாவதி கமிஷன் முன்பு ஆறு ஆண்டுகளாக ஆஜராகி குறுக்கு விசாரணை செய்து வரும் வழக்க றிஞர் முகுல் சின்கா, 'அறிக்கை, சாட்சியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் படவில்லை' என்றும் 'இது எனக்கு ஆச்சா¢யமாக இல்லை!' என்றும் குறிப்பிடுகிறார்.மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், 'மோடி அப்பாவி என்று அறிக்கையில் கூறப்பட்டுள் ளதை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை. அவர் சமூகக் கிருமிகளின் மையம். செய்த குற்றங்களுக் காக அவர் தண்டிக்கப்பட்டிருந்தால், எந்த இளைஞனும் இன்று தீவிரவாதியாக மாறியிருக்க மாட் டான்!' என்கிறார்.கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த அறிக்கை, முதல் கட்டம்... இரண்டாம் கட்டம்... என்று பி¡¢க்கப்படுவதன் பின்னணி, சந்தேகம் தரக்கூடியதாகவே இருக்கிறது. ஒட்டு மொத்தமாகச் சமர்ப்பிக்கப்படாமல், பாகம் பாகமாக தரப்படுவதன் பின்னணியில், மோடித்துவம் ஒளிந் திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு இந்தியன் முஜாஹிதீன் எனும் பெயா¢ல் செய்யும் கைவண்ணம் தான் என்று மதவாத அமைப்புகள் வாய் வலிக்காமல் சொன்னாலும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பத்திரிகைகள் கை வலிக்க வலிக்க வலிந்து எழுதினாலும், குஜராத் சம்பவத்தைப் பொறுத்தவரை, 'வெடிக்காத குண்டு'களால் அம்மாநில மக்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி யின் மீது ஒரு சந்தேகக் கண் இருக்கவே செய்கிறது.அதை மோடி அறியாதவர் இல்லை. தன் மீது படிந்திருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப வழக்கமான பாணிகளை கையாள்வது, இப்போதைக்கு கூடுதல் ஆபத்தையே தர வல்லது என்பதும் அவருக்குத் தெரியும்.தற்போது, அதற்குத் தேவை ஒரு புதிய அணுகுமுறை!தன் மீது படிந்திருக்கும் பழைய அழுக்கையும் புதிய அழுக்கையும் ஒரே நேரத்தில் கழுவிக்கொள்ள அவர் செய்துகொண்ட ஏற்பாடுகளில் ஒன்று தான் நானாவதி கமிஷனின், 'மோடி, ரொம்ப நல்லவ ராக்கும்!' எனும் அறிக்கை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்க முடியும்.வன்முறை அரசியலால் மூன்று முறை முதல்வராகிவிட்ட நரேந்திர மோடி, 'முந்தைய தேர்தல்களைப் போல, ஓட்டுக்களை அள்ள இனி வன்முறை இந்துத்துவா கை கொடுக்குமா?' எனும் பயத்தில், அவர் தன்னை நல்லவராகவும் மாநிலத்தின் ரட்சகராகவும் காட்டிக் கொள்வதற்கு கேட்டுவாங்கிப் போட்டுக் கொண்ட அவதாரமே, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதியின் நற்சான்றிதழ்!அணுசக்தி ஒப்பந்தம், ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலைவாசி, தொழில் நுட்பம் வளர்ந்தாலும் வாழ்க்கைத் தரம் உயராமை, எதிர்வரும் தேர்தல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இவைபோக மூன்றாவது அணி எனும் பெயா¢ல் எடுக்கப்படும் முஸ்தீபுகள் என்று நாடு கிடக்கும் கிடப்பில், நரேந்திர மோடி கேட்டு வாங்கிப் பூசிக்கொண்டிருக்கும் இந்த அவதாரம், கொஞ்சம் ஓவர் தான்!

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்

சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!வினவு
‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடிய விடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது. ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசுக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally) ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதை வைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.இது தொடர்பாக என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது” இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை. எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள். ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.அது போலவே, “எஸ்.சி - பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் (ம.க.இ.க.) சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்ல வைக்கப்பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறி நீதிமன்றத்தின் சாதிவெறியை விடக் கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும். ஒளிபரப்பப்பட்ட ஒரு வன்முறை - ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?“ஏனென்றால் இவை ஒளிபரப்பப்படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனசாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா? அத்தகைய ‘நியாயம்’ பதில் ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?இவையெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்க வேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது. தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - இதுதான் காந்தியின் பதில். எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்டபோது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார். அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர்சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.இப்படியொரு பச்சைப் பொய்யை சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால் இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம். போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை. இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப்படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’. அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.சாதித் தலைவரான தேவரை தேசியத் தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது! எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை. காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் - டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.“சார் வெளியூர் போல... நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.அவர்கள் பத்து பேர் - நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை. பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை - அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது!

Sunday, November 9, 2008

அமெரிக்க மக்களின் பரிதாப வாழ்கை - புதிய ஜனநாயகம்

"இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''— ஜார்ஜ் டபிள்யூ. புஷ்.
அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் கடமை! சந்தையின் சுதந்திரத்தில் கொள்ளை இலாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாரணம் எதுவுமில்லை.
2001இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்றே அமெரிக்க அரசு மக்களை அச்சுறுத்தி வந்தது. அதற்கான புதிய சட்டங்கள், கெடுபிடிகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் எல்லாம் ஜரூராக நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்த தாக்குதல் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை. நெருக்கடி என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்தே அந்த சுனாமி தாக்குதல் வந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுனாமியின் அறிகு றிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஐந்து சதவீதமாக இருந்த வேலையின்மையின் சதவீதம் பின்பு ஆறைத் தொட்டு தற்போது எட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 1,59,000 அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள், சேவைத் துறை போன்றவை இந்த வேலையிழப்பில் பங்களித்துள்ளன. பல அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்புக்கான ஆண்டிலக்கை அமல்படுத்தி வந்தன.
இப்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 28% அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்படி ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வறியவர்களாக வாழ்வைக் கழிக்கின்றனர். பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் தங்கள் மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை வீட்டு வாடகைக்கோ அல்லது கடனுக்கு வாங்கிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்கோ செலவழிக்கின்றனர். இது போக நாற்பது சதவீதம் மருத்துவ காப்பீட்டிற்குச் செலவழிக்கின்றனர். அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் இருந்தால் சிகிச்சையின்றி சாகவேண்டியதுதான்.
அமெரிக்க மக்களின் வருமானம் அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்ட இலக்குகளில் முதலாளிகளின் கைக ளுக்கு போய்ச் சேருகிறது. சராசரியாகப் பத்து கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு அமெரிக்கனும் தனது நிகழ்கால வருமானத்தை மட்டுமல்ல எதிர்கால வருமானத்தையும் முன்கூட்டியே செலவழிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். கடனுக்கு மேல் கடன், கடனை வைத்துக் கடன், வீடு, வாகனங்களை வைத்துக் கடன், பத்திரங்களை வைத்துக் கடன், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற மதிப்பீட்டில் பெறப்படும் கடன், மொத்தத்தில் முழு அமெரிக்காவுமே கடனில்தான் உயிர் வாழ்கிறது. ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் உயர் கல்வி முடிப்பதற்குக்கூட குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் கடன் தேவைப்படும்.
தற்போதைய திவாலுக்குக் காரணமாகக் கூறப்படும் வீட்டுக் கடன்தான் அமெரிக்க மக்களின் முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையாக சமீப ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சொந்த வீடு வேண்டும் என்ற கனவு தவிர்க்க முடியாத போதையாக ஏற்றப்பட்டு, சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கம் இந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. கடன் கட்ட முடியாமல் போகும் போது வீட்டை, கடன் கொடுத்த அடமான வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். நமது ஊரில் சேட்டிடம் வாகனக்கடன் வாங்கி தவணை கட்டமுடியாத போது வண்டியை சேட்டு எடுத்துக் கொள்வது போலத்தான் இதுவும். இப்படி வீட்டை இழந்தவர்கள் ஐம்பது இலட்சம் பேர் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 500 வீட்டுக்கொரு வீடு இந்த ஜப்தி நடவடிக்கையில் வருகிறது என்றால் இதன் சமூக பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். செங்கலும், மரமும், சிமெண்ட்டும் கொண்ட இந்த அஃறிணைப் பொருளுக்காக பல அமெரிக்கர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும், நேரங்களிலும் மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாய் சுரண்டும் அளவுக்கு முதலாளிகளின் இலாப வெறி தலைவிரித்தாடுகிறது. தற்போதைய திவாலில் கூட மக்கள் அபரிமிதமாய் வட்டி கட்டிய பணம் ஒரு பிரிவு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துச் சூதாடிய நிறுவனங்களுள் சில தோற்றதால் திவாலாகியிருக்கின்றன. ஆனால், இந்தச் சூதாட்டத்தில் எத்தனை மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, திவாலாகியிருக்கின்றனர் என்ற விவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் யாரும் தயாராயில்லை. மற்ற சமூகங்களில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் அந்த சமூகத்தின் மனநிலையைத் தீர்மானிக்கும் போது அமெரிக்க சமூகத்தில் மட்டும் பணமும், பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே மக்களின் உளவியல் சீர்கேடுகளை வடிவமைக்கின்றன. காதலும், விவாகரத்தும், உறவும், பிரிவும், மகிழ்ச்சியும், வேதனையும், கொலைகளும், தற்கொலைகளும் அங்கே பணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
···
அமெரிக்க நிறுவனங்கள் திவாலான மறுநாளே அதற்கான முதல் பலி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தேறியது. அக்டோபர் 4, அமெரிக்க வாழ் இந்தியரான 45 வயது கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, மாமியார், மூன்று மகன்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சோனி நிறுவனத்திலும், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் அதன் பிறகு பல மாதங்கள் வேலையின்றியும் இருந்த ராஜாராம் தனது சேமிப்பு அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பல நிறுவனங்கள் திவாலாகி பங்குச் சந்தை தலை குப்புற கவிழ்ந்ததும் ராஜாராமும் நிலை குலைந்து போனார். மரணத்துக்கு முந்தைய அவரது கடிதங்களில் தான் உடைந்து போனதாகவும், உருகும் பொருளாதாரத்தில் தான் ஏராளமான நிதியை இழந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
திவாலாகிய அமெரிக்காவில் மக்களின் இந்தத் தற்கொலைகள் பல தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றுதானே தவிர, பல மாதங்களாகவே குறிப்பாக வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து கலவரங்கள், கைதுகள், கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பல வன்முறையுடன்தான் நடந்திருக்கின்றன. இவற்றில் பல ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை என்பதிலிருந்து அமெரிக்க சமூகம் பல மாதங்களாகவே இந்த பொருளாதார பயங்கரவாதத்துடன்தான் வாழ்ந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.
பிப்ரவரி மாதத்தில் கொலார்டோ பகுதியில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை காலிசெய்யும் நோட்டீசைக் கண்டு தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நோட்டீசை ஒட்டச் சென்ற போலீசால் அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரால் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மார்ச் மாதம் புளோரிடா மாநிலத்தின் ஒசாலா பகுதியைச் சேர்ந்த ரோலண்ட் கோர் தனது வீட்டை அடமான வங்கிக்கு ஒப்படைக்கும் நிர்ப்பந்தத்தால் மனமுடைந்து மனைவியையும், வீட்டு நாயையும் கொன்று விட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் மரியன் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்வதற்கு அறிவிப்புடன் சென்ற ரோபர்ட்டை அந்த வீட்டில் வசித்து வந்த பிராங்க் கொனார்டு துப்பாக்கியைக் காட்டி ""எனது சொத்தை விட்டு நீ அகலுவதற்கு இரண்டு விநாடிகள் தருகிறேன், இல்லையென்றால் நீ மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்'' என்று மிரட்டினார். பின்னர் பிராங்க் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் 3ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காட்ரீனா தற்காலிக வசிப்பிடத்தில் வசித்து வந்த மின்ஷெவ்வை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிரடிப்படை வந்து கண்ணீர் புகைக் குண்டு வீசிப் பல மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக சுட்டுக் கொன்றது. ஏதோ அமெரிக்கப் படை ஈராக்கிலும், ஆப்கானிலும்தான் மக்களைச் சுட்டுக் கொல்கிறது என்பதல்ல, சொந்தநாட்டு மக்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதே தேதியில் ஒரேகான் மாநிலத்தின் முல்ட்னோமா கவுன்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குச் சென்ற போலீசின் முன் அந்த நபர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது துப்பாக்கியை பிடுங்கிய போலீசு பின்னர் அவரைக் கைது செய்தது.
இந்த ஆண்டு முழுவதும் வீட்டைக் காலி செய்யும் இந்தப் பயங்கரவாதமே அமெரிக்க மக்களின் மனச்சிதைவுக்கு காரணமாக இருந்தன என்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலிபோர்னியாவில் இந்த மன அழுத்தங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இத்தகைய பணநெருக்கடிகளால் வரும் அழைப்புகள் 200 சதம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரின் மருத்துவமனை ஒன்றின் உளவியல் மருத்துவர் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பொருளாதார நெருக்கடிகளினால் மனநிம்மதியிழந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 69% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து முழு அமெரிக்காவுமே இந்தக் கொதி நிலையில் உழன்று கொண்டிருப்பதை அறிய முடியும். அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு பின்லாடன் தேவையில்லை என்பதையும் இந்தச் செய்திகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.
வீட்டை இழக்கப் போகும் இந்த ஜப்தி நடவடிக்கைகளுக்காக மனச்சிதைவு அடையும் எல்லோரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஸ்கேர்மென்டோ கவுன்டியின் காவல்துறை ஷெரிஃபீன் உதவியாளர் மார்க் ஹெபெக்கர் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தபோது இந்த ஆண்டு வீடு காலி செய்யும் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது இரண்டு உரிமையாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது சக அலுவலர் ஒருவரின் அனுபவத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தனது உடல் வீட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற குறிப்பை எழுதியிருந்தாராம் என்றால் இதன் கொடூரத்தை யாரும் உணர முடியும். ஹாலிவுட் படங்களில் விதவிதமான வேற்றுக் கிரக ""ஏலியன்ஸ்''கள் அமெரிக்கர்களை அச்சுறுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எந்தத் திரைப்படமும் மக்களை உண்மையில் வதைக்கும் இந்த முதலாளித்துவ ஏலியன்ஸைப் பற்றி பேசுவதில்லை. ஜூலை மாதம் புளோரிடாவின் மிடில்பர்க் பகுதியில் ஜார்ஜ் என்பவரின் வீட்டிற்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டச் சென்றது போலீசு. இதைக் கண்டவுடன் வீட்டின் தலைவர் ஜார்ஜூம் அவரது மனைவி போனி மேக்னமும் கதவை அடைத்துக் கொண்டு நோட்டீசை வாங்க மறுத்தார்கள். எப்படியாவது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த ஜார்ஜ் தனது கையில் துப்பாக்கியிருப்பதாக மிரட்டினார். உண்மையில் அவரது கையில் ஆயுதமில்லை என்பதை அறிந்த போலீசு தங்களை மிரட்டியதாக அவரைக் கைது செய்தது. அந்த தம்பதியினரின் மகள் ராபின் சொல்கிறார், ""இது எங்கள் வீடு, இது மட்டும்தான் எங்கள் வீடு, எனது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர், தற்போது உடல்நலமில்லாதவர், அவரைப் போய் உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சொன்னால் அது நியாயமா?''
சந்தைக்கு இலாபம் மட்டும்தான் நியாயம், மற்றெதுவும் அநியாயம்தான். ஈராக்கிலும், ஆப்கானிலும் போரில் ஈடுபட்டுத் திரும்பும் அமெரிக்க வீரர்கள் இரண்டு விதமான மனச்சிதைவை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று போரினால் வரும் விரக்தியும் இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையால் வரும் நிம்மதியின்மையும் காரணமாம். குறைந்த பட்ச அமெரிக்க வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான சம்பளம் கூட இல்லாமல் பல அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் கடனில் சிக்கி வீடுகளை இழந்து நிர்க்கதியாக வாழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்புக்கு உதவும் இராணுவ வீரர்களைக்கூட அமெரிக்கா கைவிடுகிறது என்றால், மற்ற மக்களின் கதி என்ன என்பதைக் கேள்வியின்றி புரிந்து கொள்ளலாம்.
புளோரிடாவின் பெனெல்லா பார்க்கில் வாழும் 44 வயது டல்லாஸ் கார்ட்டர் மனைவியைப் பிரிந்து குழந்தைகளோடு வாழும் ஒரு ஊனமுற்றவராவார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து, கடனில் மூழ்கி இறுதியில் தனது வீட்டையும் பறிகொடுக்கும் நிலையில் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசிய கார்ட்டர் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடன் விரைந்த போலீசு அவரைச் சரணடையுமாறு கேட்டது. பூட்டிய வீட்டில் துப்பாக்கியுடன் இருந்த கார்ட்டர் அதை மறுத்ததால் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நமது ஊரில் போராடும் மக்களை போலீசு சுட்டுக் கொல்கிறது. இதுவே அமெரிக்காவில் தனித்தனி வீடுகளில் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத அமெரிக்க மக்கள் இப்படித்தான் தமது உயிரைக் கொடுத்து விடுதலை அடைகின்றனர். அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தனிமனிதனது விடுதலை இப்படித்தான் இருக்க முடியும் போல.
ஜூலை 23ஆம் தேதி மாசூசெட்ஸ் மாநிலத்தின் டான்டன் பகுதியைச் சேர்ந்த காரலீன் என்ற பெண்மணியின் வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலமிட இருக்கிறது. அதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த அடமான நிறுவனத்திற்கு பேக்ஸ் அனுப்பிய காரலீன் அதில் தனது வீடு ஜப்தி செய்யப்படும் முன்பு தான் இறந்து விடுவேனென குறிப்பிடுகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது கணவன் மற்றும் மகனுடன் அந்த நிறுவனம் இணக்கமான உறவு வைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் காரலீன். காரணம் அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வைத்து தனது கணவன் வீட்டை மீட்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதும் காரலீன் சொன்னபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப் பெண்மணியின் கணவரான ஜான் ""எங்களது நிதி விவகாரத்தை எனது மனைவிதான் கவனித்து வந்தாள், வீடு ஜப்தி செய்யப்படப்போவது கூட எனக்குத் தெரியாது, அதற்கான எந்த அடையாளத்தையும் அவள் காட்டிக் கொண்டதில்லை'' என்று கதறி அழுகிறார். இரக்கமற்ற முதலாளித்து சமூகத்தின் முன் ஒரு பேதைப் பெண் வேறு எப்படிப் போராடியிருக்கமுடியும்? வீட்டிற்கு விலையாக தனது உயிரைக் கொடுத்த காரலீன் அமெரிக்காவின் விதிவிலக்கல்ல, இப்படித்தான் பலர் தங்களது கடனுக்கு வழி தேடுகிறார்கள்.
மிக்சிகனின் பே சிட்டியில் வாழும் 56 வயது டேவிட்டும் அவரது மனைவி ஷெரானும் வீட்டை இழந்து தாங்கள் திவாலானவர்கள் என்பதற்காக மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் முறைப்படிச் செய்யவேண்டிய நடைமுறைகளை செய்யவில்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேவிட் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி விட்டு தனது மனைவியை சமையல் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, வீட்டிற்கு தீவைத்து எரித்த பிறகு மனைவியின் அருகில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்கிறார். தங்களைத் திவாலானவர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் அமெரிக்க நிறுவனங்கள் அடைந்த ஆதாயங்களுக்கு மத்தியில் தன்னை திவாலானவன் என்று அறிவிக்க முடியாத அமெரிக்க குடிமகனின் கோரமான முடிவு இது. மின்னசோட்டாவின் ரோஸ்விலி பகுதியில் வாழும் சில்வியா சிஃபர்மேன் எனும் பெண்மணி இரண்டு சீனப்பெண் குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கிறார். அவர்களுக்கு இப்போது வயது 11. தனது மகள்களின் வளர்ச்சியில் பூரிப்படையும் அந்தத் தாய் அதை இணையத்தில் அவரது வலைப்பூவில் பதிவு செய்கிறார். ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தாக்கிய அந்தச் சுனாமியில் தனது வேலையை இழந்து கடனில் மூழ்கிய சில்வியா தான் பாசமாக வளர்த்த இருமகள்களையும் வேறுவழியின்றி கத்தியால் குத்துகிறார். ஒருமகள் ஆபத்திலிருந்து தப்பித்துவிட மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க சித்த பிரமையடைந்த சில்வியா போலீசு காவலில் இருக்கிறார். இனிமேல் தனது மகள்கள் வாழ்வதற்குத் தேவையான எவற்றையும் அளிக்கமுடியாது என்று பரிதவித்த ஒரு தாயின் கதையிது.
லாஸ் ஏஞ்செல்சில் கார்த்திக் ராஜாராம் தனது குடும்பத்தையும் தன்னையும் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் முன்னால் அடி போல்க் எனும் 90 வயது மூதாட்டி ஜப்தி செய்யப்பட்ட தனது வீட்டிலிருந்து தன்னை தூக்கி எறிவதை எப்படி நிறுத்துவது என்று யோசித்தார். அவருக்கு இருந்த ஒரே வழி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனாலும் முதுமை காரணமாக சரியாக சுடமுடியாததால் காயமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் ஊடகங்களால் பேசப்பட்டதால் இந்த வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த பென்னி மா நிறுவனம் "பெரிய மனதுடன்' அந்த வீட்டை அந்த மூதாட்டிக்கே திரும்ப ஒப்படைத்து விட்டது. பலவருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு 90 வயது மூதாட்டி தூக்கி எறியப்பட இருக்கிறாள் என்றால் அமெரிக்க சமூகத்தின் இரக்கத்தை என்னவென்று அழைப்பது?
···
வேலையின்மையும், கடனும், வீட்டை இழப்பதும் அமெரிக்க சமூகத்தைக் கரையான் போல அரித்து வருகின்றன. மற்ற துன்பங்களையெல்லாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் அமெரிக்க மக்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதை மட்டும் பாரதூரமாக நிவாரணமற்ற வலியாக உணருகிறார்கள். இந்தக் கதைகள் அமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் மட்டுமே. மேலும் அமெரிக்க ஊடகங்களால்கூட பேசப்படாத கதைகளும் கூட. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தும் இந்த அநீதியை எதிர்த்துக் கொலைகளும் தற்கொலைகளும் சடங்காய் நடந்து வருகின்றன. பல இடங்களில் மக்கள் சிறு அமைப்புகளாக அணிதிரண்டு இந்த ஜப்தி நடவடிக்கையை தடுக்க நினைத்தாலும் அவை வெற்றிபெறவில்லை. முதலாளிகளின் உரிமையை நிலை நாட்ட வரும் போலீசு அவர்களைக் கைது செய்து சொத்துடைமையின் அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.
உலகமயமாக்கத்தால் விவசாயம் சீர்குலைந்து வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் இந்திய விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்கள். வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்ற மான உணர்ச்சியுடன் வாழும் இந்த விவசாயிகளின் பண்பு அமெரிக்க ஏழைகளுக்கும் இருக்கிறது. அங்கே துப்பாக்கிகள் மலிவாகக் கிடைப்பதால் பூச்சி மருந்துக்கு தேவையில்லை. அப்படித்தான் பலரது வாழ்வை வெடிமருந்துகள் தீர்த்து வைக்கின்றன. வீட்டின் மேல் பெற்ற கடனை அடைத்தும், அடைக்கமுடியாத போது வீட்டை விட்டு வெளியேறி அல்லது தனது உயிரைக் கொடுத்தாவது ஆயுள் காப்பீடு மூலம் வாங்கிய கடனை கட்ட நினைக்கும் இந்த மக்களின் நாட்டில்தான் முதலாளிகளின் சூதாட்ட நட்டத்திற்கு அமெரிக்க அரசு அள்ளிக் கொடுக்கிறது. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை கேள்விப் படும்போது அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல என்பது எல்லோருக்கும் புரியவரும். ஏழை நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைப்பதில்லை என்பதிலிருந்து உலகமயக் கொள்கை என்பது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்காவையும் அரித்துத் தின்னும் விஷ ஜந்து என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா? · இளநம்பி

Friday, October 31, 2008

'குண்டு வெடிச்சுருச்சா?.. பழியை, முஸ்லீம் மேல போடு!'-எஸ். அர்ஷியா

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகம் என்பது இரட்டைப் போக்காகவும், நேர்மையற்றதாகவும் இருக்கிறது. விவேகமற்ற முறையில், மதத்தின் மீது அது தொடுக்கும் தாக்குதல், பயங்கரவாதத்தின் வேர்களையும் அதன் போக்கையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகச் சித்தா¢த்து, பாரதீய ஜனதா கட்சி பலத்த குரலில் ஆதாரமற்று எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட்டுப்போகும் மொன்னைத்தனத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைக்கொண்டு வருகிறது. 'பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்றவர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அந்தப்பதவிக்கு பொருத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்' என்று 'காவித்தனமாய்' அவை வைக்கும் கோ¡¢க்கைகளால் உசுப்பேற்றப்படும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி, குயுக்தியான நடவடிக்கைளுக்கு மூலகர்த்தா ஆகியிருக்கிறார்.காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத் தின் தலைவரான வீரப்பமொய்லியோ, இன்னும் ஒருபடி மேலேபோய், பாரதீய ஜனதா கட்சியின் ஊதுகுழலாகவே மாறிவிட்டிருக்கிறார். 'பயங்கரவாத ஒழிப்புச்சட்டம் கடுமையாக, புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்' என்று, அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில், திருவாய் மலர்ந்து அரசுக்கு பா¢ந்துரை செய்கிறார். அந்தப் பா¢ந்துரை, பாரதீய ஜனதா கட்சியின் முக்கியக் கோ¡¢க்கைகளில் ஒன்றான கொடிய 'பொடா' சட்டத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒத்தே இருக் கிறது. போலீஸ் சொல்லும் செய்தியை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கா¢த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பா¢ந்துரை வலியுறுத்துவதாக இருக்கிறது.இதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கைகள் அமைந்து வருகின்றன என்பது, தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், இஸ்லாமிய சமூகத்துக்கு நெருக்கடியும், வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையும் அதிகா¢த்து வரு கிறது. அதன் ஒருபடிதான், செப்டம்பர் 19ம் தேதியின் பட்டப்பகலில், டெல்லி ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் முன்பு, அரசு தன் கோரமுகத்தைக் காட்டியதும்!டெல்லி போலீஸின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப்பி¡¢வு, ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் குடியிருந்த மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித் ஆகிய இரு இளைஞர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி சுட்டுக்கொன்றது. மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக வும் இரண்டுபேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ்தரப்பில் தொ¢விக்கப்பட்டது. 'இவர்கள்தான் நாட்டில் நடந்த, சமீபத்திய அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் திட்டமிட்டு நடத்தியவர்கள்' என்று அது வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் 'தனிப்பட்ட கவனத்தின்' போ¢ல் நடந்தேறியதாகச் சொல்லப்படுகிறது.இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற இந்தச்சம்பவம், ஊழல் மன்னனும் பெரும் பிளாக் மெய்லருமான ரஜ்பீர் சிங்கை, அன்ஸல் பிளாஸாவில் வைத்து, கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற என்கவுண்டரை போலவே இருக்கிறது.இதற்குமுன்பு, 35 பேரை என்கவுண்டா¢ல் 'போட்டு'த் தள்ளியதில் புகழ்பெற்ற 'இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவை, இந்த இருஇளைஞர்கள் சுட்டுக்கொன்றதால், அதன்போ¢ல் நடத்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதல் சம்பவம் இது' என்று போலீஸ¥ம், அரசும் ஒரேகுரலில் பொய்யாய்ப் புனைந் துரைக்கின்றன. 'நல்லதொரு போலீஸ் அதிகா¡¢யையே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று அரசின் நடவடிக்கைளுக்கு, பா¢தாபத்தை சம்பாதித்துக்கொள்ள முயன்ற அவர்களது புழுகுமூட்டை யுக்தி, தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரவர்க்கம் வெளியிடும் அறிக்கைகள், முற்றிலும் கட்டுக்கதைகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.அதிகாரவர்க்கம் வெளியிட்டிருக்கும் இன்னொரு கேலிக்கூத்து அறிக்கையைப் பார்ப்போம். வாரணாசி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. அதில் பாவப்பட்ட... ஒன்றுமறியாத அப்பாவி மக்களே பெரும்பாலும் உயி¡¢ழந்தனர். இந்தச்சம்பவங்களை நடத்தியது, இந்தியன் முஜாஹிதீனின் முக்கியத்தலைவரான அதீப் அமீன் என்கிறது, டெல்லி போலீஸ். ஆனால் மும்பை போலீஸோ, அதற்கு முற்றிலும் மாறாக... அனைத்துச் சம்பவங்களும் - டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட - நான்குபேருடன் கைது செய்யப்பட்டுள்ள மொகம்மத் சாதிக் ஷேக்கின் திட்டமிடலின்படியே நடந்தேறியது என்று சாதிக்கிறது.இந்த முரணான அறிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் தவறாகப் பிடிக்கப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ எனும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதன் அடிப்படையில்தான் என்று எண்ணவும் தோன்றுகிறது.டெல்லி போலீஸ் சொல்லும் அறிக்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளன, வாரணாசி, ஜெய்ப்பூர், அஹமதாபாத் போலீஸ் சொல்லும் தகவல்கள். அந்தச்சம்பவங்களை முறையே வலியல்லாஹ், ஷாபாஜ் ஹ¥சைன், அபு பஷீர் மற்றும் அப்துல் சுபான் குரேஷி என்ற தவ்கீர் ஆகியோர் நடத்தியதாகச் சொல்கின்றன. இதில் தவ்கீர், மத்திய புலானாய்வுத்துறையினரால் 'சதித் திட்டங்களை தீட்டியவர்' என்ற வர்ணிப்புடன் பிரபல்யமாக்கப்பட்டவர்.இதில் அதீப் அமீனுக்கு, பஷீர் என்று இன்னொரு பெயரும் இருப்பதாக போலீஸ் திட்டமிட்டுச் சொல்லி வருகிறது. இதனை அதீப் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் அப்படி ஒருபெயர் அவருக்கு இருந்ததில்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர். இங்கு அதீப்பின் அடையாளத்துடன் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட இல்லாத நபரை அரங்கேற்றும் போலீஸின் அரக்கத் தன்மை காணக் கிடைக்கின்றது. டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்பு, அஜாம்கா¡¢லுள்ள யூனியன் பேங்க்கிலிருந்து அதீப் அமீன் 3 கோடி ரூபாயை எடுத்தாகவும், அதைக்கொண்டுதான் நிழல் நடவடிக்கைகளையும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியதாகவும் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஊடகங்களின் விசாரணை, போலீஸின் பொய்யுரைகளை தண்டவாளத்தில் ஏற்றுகின்றன. ஜூலை மாதத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருக்கும் அதீப் அமீனின் வங்கிக்கணக்கில் இருப்பதோ வெறுமனே 1,400 ரூபாய் தானாம்!ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் சமீபத்தில் குடிவந்த மொகம்மத் அதீப் அமீன், அதற்கு முறையாக பத்திரம் பதிவு செய்திருக்கிறார். அதை போலீஸ் ஆய்வு செய்திருக்கிறது. போலீஸால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அவர்கள், உண்மையிலேயே பயங்கர வாதிகளாக இருந்தால், வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செயல்படுவார்களா என்ன?ஜாமியா நகர் என்கவுண்டர் சம்பவத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே அந்தப்பகுதி, போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே 'குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளை இவர்கள்' என்று, திட்டமிட்டு என்கவுண்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.ஜூலை 26 ம் தேதி அஹமதாபாத் குண்டு வெடிப்புச்சம்பவத்தில், குண்டுகளை வைத்ததாக போலீ ஸால் குற்றம்சாட்டப்பட்டு, அதீப் அமீனின் கூட்டாளியாக வர்ணிக்கப்படும் சாகிப் நிஸார், ஜூலை 22 ம் தேதியிலிருந்து 28 ம் தேதிவரை டெல்லியில் எம்பிஏ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.என்கவுண்டர் சம்பவத்தை நோ¢ல்கண்ட பல சாட்சிகள், போலீஸ் வெளியிட்டிருக்கும் பொய் அறிக் கைகளைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். தி¡¢க்கப்பட்டுள்ள அந்தஅறிக்கையில், எதுவுமே உண்மையில்லை என்று அப்பட்டமாகியிருக்கிறது.சம்பவம் நடந்த அன்று, அதீப் அமீன் குடியிருந்த ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் போலீஸ் நுழைகிறது. நான்காவது தளத்திலிருக்கும் அந்தவீட்டிலிருந்து இரண்டுபேரை வலுக் கட்டாயமாக வெளியே இழுத்து வருகிறது. கிட்டத்தட்ட நூறுபடிகளுக்கும் மேலான அந்த குறுகலான நடைபாதையில் 'தரதர'வென்று இழுபட்டு வந்த அவர்கள், தரைப்பகுதியில் குவிந்திருக்கும் போலீஸ் முன்னால் நிறுத்தப்படுகின்றனர். பெரும் ஆயுதப்படையுடன் போலீஸ் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய நபராக, 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவும் இருக்கிறார்.போலீஸ் காட்டிய வலுப்பிரயோகத்தில் இழுபட்டபோது நைந்து போயிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் நிற்கவே திராணியற்றவர்களாக இருந்தார்கள். அந்தப்பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போலீஸ், நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இருவரையும் மேலும் நையப்புடைத்துத் தள்ளியது. போலீஸ் கும்பல் சுற்றிநின்றுகொண்டு 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் தலைமையில் அவர்களை வெளுத்துக் கட்டும்போது, போலீஸ்காரன் ஒருவனின் துப்பாக்கி ஒன்று, கூட்டத்தில் முழங்குகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள் 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவைத் தாக்குகிறது. ஷர்மா தரையில் வீழ்கிறார்.அதன்பின்பே கண்மூடித்தனமாக அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் எதிர்ப்பு காட்ட முடியாத point - blank range ல் சுட்டிக் கொல்லப்படுகின்றனர். சவக்குழியில் வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சாகிப் நிஸா¡¢ன் புகைப்படத்தில் தோளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்த பெருந்துவாரங்கள் காணப்படுகின்றன. தலையின் முன்பகுதியில் குண்டுதுளைத்த நான்கு ஓட்டைகள் இருந்தன. தலையில் ஒருகுண்டு புகுந்தாலே உயிர்போய்விடும் என்று அறிவியலே சொல்லும்போது, அடுத்தடுத்து குண்டுகளை தலையில் செலுத்தியிருப்பது, போலீஸின் கடைந்தெடுத்தக் கோழைத்தனத்தையும் காட்டு மிராண்டித்தனத்தையும் ஒருசேர நமக்கு புலப்படுத்துகிறது.'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, ஹெட் லைன்ஸ் நியூஸ் சானலுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையை அந்த சானல் வெளியிட்டிருக்கிறது. அதில், நேருக்கு நேரான என்கவுண்டர் மோதலில் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை என்றும் அவருக்கு பின்புறத்திலிருந்து வந்து துளைத்த குண்டுகள், பக்கவாட்டில் வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ¥ம், அரசும் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் சரமா¡¢யாகச் சுட்டதில் அவர் உயி¡¢ழந்ததாக பா¢தாபக் கதையை உருவாக்கி உலவவிட்டிருந்தது. அதுபோல அவர் மீது இளைஞர்கள் இருவரும் பலமுறை சுட்டதில் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்ட இட்டுக்கட்டலும் பொய்யாகியுள்ளது.இந்தச்சம்பவத்தில் உயி¡¢ழந்த மோகன் சந்த் ஷர்மா உள்ளிட்ட மூவா¢ன் சடலங்களும் தடய அறிவி யல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதுபோலவே பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள்ளி ருந்த ஐந்துபோ¢ல் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது, மிகப்பொ¢ய புனைக்கதை! ஏனென்றால், தப்பி ஓடிச்செல்லுமளவுக்கு அங்கே விசாலமான வழி ஏதும் இல்லை. உள்ளே செல் வதற்கும் வெளியே வருவதற்கும் மிகக் குறுகலான ஒரே பாதைதான் உள்ளது.நேர்மைக்குப் புறம்பான போலீஸின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கடப்பாடற்ற நடவடிக்கைகளும் நீசத்தனத்துடன் இருப்பதால், அரசையும் நம்பும்படியாக இல்லை. பாமர மக்கள் கூட அதை ஏற்கஇயலாது, வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையை உணர்ந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள கொடூரத்தை, கண்ணியமற்றச் செயல்களை சுதந்திரமான... நேர்மையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, 'போலீஸ் சொல்வது சா¢தானா... அல்லது பொய்யா...' என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.சமீபத்திய சம்பவங்களால் ஒன்றுபட்டிருக்கும் இந்துத்துவ 'பயங்கரவாதி'களான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகள், தங்களை சுத்த சுயங்களாக்கிக் கொண்டுள்ளதாக வேடம் போடுகின்றன. சிறுபான்மையினத்தவருக்கு எதிரான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அவைதான் அடையாளத்துடனேயே நடத்துகின்றன. அதற்கு போலீஸ¥ம் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களும் குடைபிடிப்பதுதான் கொடுமை! இந்த இந்துத்துவ பயங்கரவாதி கள்தான், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அசுர அட்டகாசத்தை, கொலைவெறியை, தீ வைப்பை, கற்பழிப்பை, சொத்துகள் சூறையாடலை ஒ¡¢சாவிலும், கர்நாடகத்திலும், மத்திய பிரதேசத் திலும், கேரளத்திலும் நடத்தியவை. அரசுகளின் ஒத்துழைப்பும் சதித் திட்டமுமின்றி இவற்றைச் செய்திருக்கவே முடியாது.பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாட்டில், இந்துக்கள் அல்லாத அப்பாவி மக்களை நூற்றுக் கணக்கில் கொன்று குவித்ததை ஒத்துக்கொண்டிருக்கும் அவர்களை, இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற வார்த்தைக் கொண்டு யாரும் விளிப்பதே இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்தியவர்களை, தமிழ்நாட்டில் தென்காசியில் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூ¡¢ல் குண்டுகளை விதைத்த காவிக்கும் பலை இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்கமுடியும்?சிறுபான்மை இனத்துக்கு எதிரானக் கொடூரங்களில் ஈடுபடும் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளங்கண்டு கைது செய்யப்படும் சம்பவங்கள், எப்போதாவது அத்திப்பூத்தாற் போல நடந்து விடுகிறது. ஆனால் அவர்கள் தண்டனைக்குள்ளாவது, இந்தியாவில் மிகச் சொற்பமாகவே நடந்துள்ளது.அதேவேளையில், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று மதச் சிறுபான்மையினரை, சந்தேகத்தின் அடிப்படையில் கருணையற்ற முறையில் பிடித்துச்சென்று மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும், சட்ட விரோதமாகத் தண்டிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், பல நேரங்களில் விசார ணையின்றி தண்டனை வழங்குவதும், கொல்லப்பட்டு விடுவதும் கூட வாடிக்கையாக உள்ளது.பயங்கரவாதம் குறித்த சொல்லாடல் வெளிப்படும்போதெல்லாம், அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இரட்டைத்தன்மை முறையை கையாளுகின்றனர். பயங்கரவாதம் என்ற சொல், சிறுபான்மையினருக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பார்வையையே அது கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தப்பார்வை இருந்து வருகிறது. அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் அதைத் திரும்பத் திரும்ப பிரசாரம்செய்து, பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்று அர்த்தம் கற்பித்து ஸ்திரப்படுத்திவிட்டது.அதைத் தெளிவுபடுத்துவதுபோல, கடந்த செப்டம்பர் 22 ம் தேதி, இந்திய ஊடகங்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் என்று 'கெப்•பியா' என்ற துணியால் அரேபியர்கள்போல முகம் மூடப்பட்ட மூன்று போ¢ன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அப்படி முகம் மூடி, துணி அணியச்சொல்லி அழைத்து வந்தது, டெல்லி போலீஸ். முகம் மறைக்கப்பட்ட மூவரும் பயங்கரவாதத்தை அரங்கேற்ற தேவை யான பொருட்களை வாங்கி சேகா¢த்துத் தந்தவர்களாம். இந்த இடத்தில் பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் என்றால், சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஒசாமா பின்லேடனின் சொல்லை இங்கே நிறைவேற்றுபவர்கள் என்ற சமன்பாட்டை நிறுவ அரசு முயலுகிறது. ஒரு அரசுநிறுவனத்தால் குறிப்பிட்ட சமூகத்தை, அதன் வளமையை, தொன்மையை சிதைக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை.குண்டுவெடிப்பு சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தவுடன், சம்பவத்தை நோ¢ல் பார்த்த சாட்சியங்கள் சொல்லும் குறிப்பின்படி வரையப்பட்ட சிலபடங்கள் ஊடகங்களில் வெளியாகும். அவற்றின் கீழே அரபி வார்த்தையுடன் கூடிய ஒருபெயர் இருக்கும். அடுத்த சிலநாட்களில், அந்தப் பெயருக்கு¡¢யவர் கைது செய்யப்பட்டதாக செய்திவரும். இப்போது இடம்பெற்றிருக்கும் படத்திலிருப்பவர், 'கெப்•பியா' வோ... ஸ்கார்ப்போ... அல்லது பத்துரூபாய்க்கு விற்கும் பிளாட்பாரத்துண்டால் முகம் மூடியவராக இருப்பார். படத்தில் வரையப்பட்டவர் பிடிபட்டிருந்தால், அதை ¨தா¢யமாக... வெளிப்படையாக... 'அவர் தான், இவர்' என்று பகிரங்கப்படுத்தலாமே. புனைந்துரைக்கும் அரசு நிறுவனத்தால் அது ஒரு போதும் முடியாது. ஏனென்றால், படத்திலிருந்தவர் ஒருவராக இருப்பார். அவர் பெயா¢ல் பிடிக்கப் பட்டு வந்தவர் வேறு ஒருவராக இருப்பார். தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய முக்காட்டை, பிடித்துக்கொண்டுவந்த அப்பாவியின் மீது போலீஸ் போடுகிறது. அவ்வளவுதான்!ஏனென்றால், இந்திய அரசு சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாக் கத் தவறிவிட்டது. பெரும்பான்மைக் குழுக்களை காப்பதிலேயே அது கவனம்செலுத்தி வருகிறது. சிறுபான்மையினர் உ¡¢மை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட அறிவு முகமையின் பெருந்தலைகள் உள்ளன. இந்துத்துவ பயங்கரவாதச் சாயத்தை தங்கள் மீது ஊற்றிக் கொண்டிருக்கும் அவர்கள், முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற அந்த அமைப்புதான் இதைச் செய்தது ... அதைச் செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது அதிலிருந்து மாறி சுதேசிகளாகி விட்டனர். 'குண்டு வெடிச்சுருச்சா? ஏன் கவலைப்படுற? பழியைத்தூக்கி முஸ்லீம்க மேல போடு!' என்பதாக எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களையும் இந்துத்துவ கண்ணாடி மூலம் பார்த்து, முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்பதும், வெட்ட வெளிச்சமாகிவிட்டது.பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள Delhi's Special Cell, Maharastra's Anti - Terrorism Squad, Special Task Forces, உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் சகல அதிகாரங்களையும் படைத்ததாக இருக்கின்றன. அதனாலேயே ஊழலும், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களும், வரம்புமீறிய செயல்களும் செய்பவர்களாக இந்த அமைப்புகளில் பணிபு¡¢பவர்கள் இருக்கின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பொதுமக்களின் சொத்து களையும், பொதுச் சொத்துகளையும் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதத்தை விளைவித்து உள்ளனர். அதுபோல மனிதஉ¡¢மை மீறல்களையும் நீதிக்குப்புறம்பான செயல்களையும் செய்துள்ள அவர்கள், அரசுப்பணத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளனர்.இந்த சம்பவங்களுக்குப் பின்பு, சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான சமூக, பொருளாதாரத் தடைகள் அதிகா¢த்து வருகின்றன. பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்துக்குப் பின்பு, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணம் வசூலிக்க அந்தப்பகுதிக்கு அனுப்புவதில்லை. பிஸ்ஸா டெலிவா¢ செய்யும் பையன்கள் அந்தப்பகுதிக்குள் செல்லவே பயப்படுகின்றனர். அந்தளவுக்கு போலீஸ், பல்வேறு பயங்கர மலிவான கதைகளைப் பரப்பிவருகிறது.பொதுச் சமூகத்திலிருந்து பிளவுபடுத்தப்பட்டுள்ள ஜாமியா நகர்வாசிகளுக்கு, டெல்லி நகராட்சியின் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! இது மேலும்மேலும் மன வேறுபாடுகளுக்கே வழிசெய்யும். குறைகளையும் நீதிக்குப்புறம்பானவற்றையும் சீர்படுத்திவிடவேண்டும். இல்லாவிட் டால், சமூக இணக்கம், சகிப்புத்தன்மை, மனித உ¡¢மைகளை இழந்தவர்களாகி, நாகா£கமான நாடு என்ற சொல்லிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிடுவோம்.அதற்கான விலையை, நம்மால் கொடுக்க முடியாது

 குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!


Written by புதிய ஜனநாயகம் Friday, 03 October 2008 21:13

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.
சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன். ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன. இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர் எனக் கருதிய ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களை அழித்தொழிக்கக் கிளம்பியது.

அவர்கள் வேறுயாரும் அல்ல. இந்து மதவெறிஊட்டப்பட்ட குஜராத் மாநிலப் போலீசார்தான். பிணங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் உழைக்கும் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் முகம்மது நகர் எனும் சேரிப் பகுதியில் போலீஸ் பட்டாளம் புகுந்தது. எந்தவொரு விசாரணையும் இன்றி, அங்கிருந்தவர்களின் மேல் போலீசுப்படை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனான அசாருதீனின் நெற்றியில் குண்டு பாய்ந்து, கழுத்து வழியாக வெளியேறியது. இரத்தம் பீறிடக் கூக்குரலிட்டவாறே அசாருதீன் கீழே சரிந்தான். துப்பாக்கிச் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து சிறுவனின் அலறலையும் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அவனது தாய் சகிலா பானுவோ, நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடியிருப்பெங்கும் போலீசார் வெறித்தனமாக மக்களைப் பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்த அந்தப் பகல் வேளையில் எதிரி நாட்டுக்குள் படையெடுத்த இராணுவத்தைப் போல கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் தாக்கினார்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சுலைகா என்ற வயதான பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். பல பெண்களுக்கு கைகளிலும், கால்களிலும் குண்டடிகள் பட்டன. முகம்மது ரபீக் எனும் இரயில்வே தொழிலாளி ஒருவர் அந்நேரம் பார்த்து தனது சைக்கிளில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிய போலீசாரிடம், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறித் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் பலனில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் குடியிருப்பிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்த பிறகுதான், போலீசின் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நின்றது. போலீசைத் தொடர்ந்து வந்த துணை இராணுவத்தினர், போலீஸ் நடத்திவிட்டுச் சென்ற தாக்குதலால் அதிர்ச்சியுற்றவர்களாக, அடிபட்டுக் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள்தான் அசாருதீனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். ஆனால் அவர்களே, அசாருதீன் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே போட்டுவிட்டனர். அலுமினிய வார்ப்படத் தொழிலாளியான அசாருதீனின் தந்தை ஷேக் இமாமுதீன் தனது குடியிருப்பில் நடந்த போலீஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தார். தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு துடித்தார். பின்னர் அங்கு வந்த போலீசு உயரதிகாரிகள் மூலம் ஒரு ஆம்புலன்சைக் கெஞ்சிப் பெற்றுக் கொண்டு தனது மகனை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அசாருதீனைப் பரிசோதித்த மருத்துவர்களோ, அவன் இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் பிணவறைக்குப் பக்கத்தில் கிடத்தப் பட்டிருந்த தனது மகனின் உடலுக்கருகில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார் இமாமுதீன். திடீரென அசாருதீனின் உடலில் அசைவு தென்பட்டது. உடனே மருத்துவர்களிடம் ஓடி, தனது மகனுக்கு சிகிச்சை தரக் கோரினார். மகனை இழந்த துக்கத்தில் பிதற்றுவதாகக் கருதி அக்கோரிக்கையை மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினர். இமாமுதீன் அவர்களது காலில் விழுந்து கெஞ்சி தனது மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார். இரக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் அசாருதீன் உயிருடனிருப்பதை அறிந்து, அவனுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மதத்தால் இந்துக்களான அவர்கள், மிகுந்த போராட்டத்திற்கிடையே அசாருதீனின் உயிரைக் காப்பாற்றினர். அவனது தாயும் மற்றொரு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு, இருவரும் வீடு திரும்பினார்கள். அசாருதீன் உயிர் பிழைத்த போதிலும், அவனால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவோ, தானே உணவருந்தவோ கழிவறைக்குச் செல்லவோ முடியாது. தீராத தலைவலியும், கண்பார்வைக் குறைவும், ஞாபக மறதியும் அச்சிறுவனை வாட்டின. மருந்துமாத்திரைகள், சிறப்பான சத்துணவுகள், சிகிச்சைக்கான செலவுகள் பெரும் சுமையாகி அவனது பெற்றோரை வதைத்தன. மகன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தால், இமாமுதீன் தனது ஆலையில் "ஓவர்டைம்'' வேலை செய்தும், ஓய்வின்றி இதர சில்லறை வேலைகளைச் செய்தும் இச்செலவுகளை ஈடேற்றினார். தங்களது உணவுச் செலவுகளை பெரிதும் குறைத்துக் கொண்டு, அசாரின் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் பலனாகவும், பெற்றோரின் பாச அரவணைப்பாலும் அசார் மெதுவாக எழுந்து நின்று நடக்கத் தொடங்கினான். படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளியான இமாம், தனது மகனை சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். குண்டடிபட்டு அதிசயமாக உயிர் பிழைத்து, ஐந்தாண்டுகளாக நடைபிணமாகக் கிடந்து, இன்று மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ள அசாரை கைத்தாங்கலாக அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அசாருக்கு தற்போது 17 வயது. பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் சிரமப்படுகிறான். நடக்கும்போது சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறான். இருப்பினும், அவன் மற்ற சிறுவர்களோடு பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது அசாரின் பெற்றோர்களது துயரமும் வேதனையும் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தனது மகனையும், மனைவியையும் காரணம் ஏதுமின்றிச் சுட்ட போலீசாரின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் இமாம். ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆனால், போலீஸ் தரப்பில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசாருதீனும் அவனது தாயாரும், இன்னும் கொல்லப்பட்ட, காயமடைந்த எல்லோரும் கூட்டமாக அருகிலிருந்த இந்துக் கோவில் ஒன்றைக் குண்டுவீசித் தகர்க்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களைச் சுட்டதாகவும் குற்றஞ்சுமத்துகிறது, அவ்வழக்கு. தனது மகன் சுடப்பட்டபோது, அவனுக்கு இந்து, முஸ்லீம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது எனக் கூறும் இமாமிற்கு, அவனைச் சுட்ட போலீசார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. குஜராத் மண்ணில் முஸ்லிம் மதத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக வதைபடும் இலட்சக்கணக்கானவர்களின் துயரத்தில் ஒருதுளிதான், அசாருதீனின் அவலம். அசாருதீனைப் பெற்ற இமாமுதீன் குடும்பத்தைப் போலவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முகம்மது நகர் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் குடும்பங்கள் ஏராளம். முகம்மது நகரில் கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம்கள், ஐந்தாண்டுகளுக்கு எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் வதைபட்டனர். போலீசு தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் எதையும் காட்டாததால், ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, பொய்க்குற்றம் சாட்டி சிறையிலடைத்த கொடுஞ்செயலுக்காக எந்தவொரு போலீசுக்காரனும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. இதோ, அசாருதீன் தனது வேதனைகளை மறைத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கிறான். அவனுக்கு நேர்ந்துள்ள துயரத்துக்கும் வேதனைக்கும் காரணம் யார் என்பதை உணர்ந்து போராடுவதுதான், அசாருதீன் மீது நாம் காட்டும் பரிவுக்கு உண்மையான பொருளாக இருக்க முடியும். ("தி ஹிந்து'' நாளேட்டில் (செப்.7,2008) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள "அசாரின் கதை''யின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்).

Wednesday, October 15, 2008

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை அருந்ததி ராய்

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை அருந்ததி ராய்
‘விடுதலை’ காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்த சுடர் இன்று கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்திய அரசு இனிமேலும் விடுதலையை மறுப்பது நயவஞ்சகம்.உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 5,00,000 ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் தங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கணமும் ‘வாழ்வா, குண்டடிப்பட்டு சாவா’ என்று கழியும் பயங்கரமாகன வாழ்க்கையை உதறித் தள்ள காஷ்மீரிகள் ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்தில் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று ஐ.நா.வில் நேரு அளித்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதி இரண்டு தலைமுறைகளாக அந்த மக்களின் நெஞ்சில் ஊசிகளைப் போல குத்திக் கொண்டிருந்தது.கடந்த 18 ஆண்டுகளாக காஷ்மீரில் வலுக்கட்டாயமாக ராணுவ ஆக்ரமிப்பை மேற்கொண்ட இந்திய அரசின் துர்கனவு தற்போது நனவுக்கு வந்துவிட்டது. தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்துவிட்ட சூழ்நிலையில், இந்திய அரசுக்கு எதிராக சாத்வீகமான மக்கள் போராட்டம் தற்போது எழுச்சி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அரசு விழி பிதுங்கி வருகிறது.ஆண்டாண்டு காலமாக பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் படுகொலை, சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக’ செய்யப்பட்டு. நுற்றுக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்ட வலிகள் ஏற்படுத்திய நெருக்கடியால் இந்த எழுச்சி உருப்பெற்றுள்ளது. காஷ்மீரிகளின் மனதில் கனன்று கொண்டிருந்த அந்தக் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இனிமேல் எளிதில் அடக்க முடியாததாகவும், மாற்ற முடியாததாகவும், பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாததாக இருக்கிறது. கடந்து சென்ற ஆண்டுகள் முழுவதும் காஷ்மீர் மக்களின் குரலை சூழ்ச்சியால் அழிக்கவும், நசுக்கவும், பிரதிநிதித்துவப்படுத்தவும், தவறாக பிரதிநிதித்துவப்படுத்தவும், அவநம்பிக்கைக்கு உள்ளாகவும், இடையீடு செய்யவும், அச்சுறுத்தவும், விலைக்கு வாங்கவும், எளிமையாக அடக்கவும் இந்திய அரசு முயற்சித்து வந்துள்ளது. இந்திய அரசு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரசாகவும் இருக்கிறது. மிக அதிக அளவு பணம், மிக அதிக அளவு வன்முறை, தவறான தகவல் தருதல், பிரச்சாரம், சித்திரவதை, உடந்தையாளர்கள் மற்றும் உளவாளிகளின் விரிவான வலைப்பின்னல், பீதியை கிளப்புதல், சிறையிலடைத்தல், அச்சுறுத்திப் பணிய வைத்தல், தேர்தல் சூழ்ச்சி போன்றவற்றின் மூலம் ‘மக்களின் எண்ணத்தை’ தோற்கடிக்க முயற்சிக்கிறது என்று இந்திர அரசை ஜனநாயகவாதிகள் குறிப்பிடுவார்கள். வெற்றி உருவாக்கிய ஆதிக்க உணர்வால், துப்பாக்கி கூட்டத்துக்கு நடுவே இயல்புநிலையை உருவாக்கிவிட்டதாகவும், மக்கள் மௌனம் காப்பது சம்மதத்துக்கு அறிகுறி என்றும் இந்திய அரசு தவறாக நம்பிவிட்டது.‘வன்முறையால் காஷ்மீரிகள் அயர்ச்சி அடைந்துவிட்டார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்’ என்று மக்களின் சார்பாக பேசிய ‘அமைதியை உருவாக்கும் தொழிற்சாலை’ கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் எநவ்தவிதமான அமைதியை விரும்புகிறார்கள் என்பது பற்ற் எப்பொழுதும் விளக்கப்படவேயில்லை, பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட காஷ்மீர்/முஸ்லீம் தீவிரவாதிப் படங்கள் ‘காஷ்மீரின் அனைத்து துயரங்களும் பாவங்களின் வாசலில் கிடக்கின்றன. மக்கள் தீவிரவாதிகளை வெறுக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பும் வகையில் மூளைச்சலவை செய்துவிட்டன. மிகவும் இருண்ட காலங்களில் கூட காஷ்மீர் மக்களின் மனதில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. அந்த மக்கள் அமைதியை விரும்பவில்லை, விடுதலைதான் வேண்டும் என்று விரும்பினார்கள் என்பது சற்று நிதானமாக காது கொடுத்து கேட்டவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு மாதங்களாக வெறுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுக்கு (இந்தியா, காஷ்மீர்) இடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி மக்கள், அவற்றை நரகத்தை நோசக்கி துரத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதியில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக, 100 ஏக்கர் காட்டுப் பகுதியை அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அளித்த விவகாரம், பெட்ரோல் கிடங்குக்குள் தீக்குச்சியை கொளுத்தி போட்டது போலாகிவிட்டது. 1989ம் ஆண்டு வரை, அமர்நாத் யாத்திரை வெறும் 20,.000 பேரை மட்டுமே ஈர்ப்பதாக இருந்தது. இரண்டு வார பயணம் செய்து யாத்ரிகர்கள் அமர்நாத் குகை கோயிலை அடைந்து கொண்டிருந்தனர். 19990ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாககில் இஸ்லாமிய தீவிரவாதிகள் எழுச்சி உருவான காலத்தில், இந்திய சமவெளியில் நச்சு இந்துத்துவ சக்திகள் பரவ ஆரம்பித்திருந்தன. இந்தச் சூழ்நிலை காரணமாக அமர்நாத் செல்லும் யாத்ரிகர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.2008ம் ஆண்டு, அமர்நாத் குகைக்கு 5,00,000 யாத்ரிகர்கள் வந்து சென்றனர். இதற்கு ஆகும் செலவை பெரும்பாலும் இந்திய வணிக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டிருந்தன. யாத்ரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்து மத அடிப்படைவாதத்தின் சார்பாக மாறி வந்த இந்திய அரசின் அரசியல் வெளிப்பாடு என்று காஷ்மீர் மக்கள் கருதத் தொடங்கினர். சாதகமாகவோ, பாதகமாகவோ நிலம் வழங்கும் நடவடிக்கை மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக மாறிவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குடியேற்றங்களைப் போல, இங்கும் இந்து குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான விரிவான திட்டத்தின் தொடக்கப்புள்ளி இது என்றும், பள்ளத்தாக்கின் வரைபடத்தையே இது முற்றிலும் மாற்றவிடும் என்ற அச்சத்தையும் அரசின் இந்த நடவடிக்கை தூண்டிவிட்டது.இதையடுத்து தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நடைபெற்ற பெரும்மக்கள் போராட்டத்தின் விளைவாக பள்ளத்தாக்கில் அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன. ஒரு சில மணி நேரங்களில், நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு போராட்டங்கள் பரவின. கல்லெறியும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி, ஆயுதமேந்திய காவல்துறையினரை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இந்த நிகழ்வுகள் 90களின் தொடக்கத்தில் உருவான எழுச்சியின் நினைவலைகளை ஒரே நேரத்தில் மக்களிடையேயும், அரசிடமும் தோற்றுவித்தது. தொடர்ந்து பல வாரங்களுக்கு போராட்டம், கடையடைப்பு, காவல்துறை துப்பாக்கிச்சூடு எல்லாம் நீடித்த வேளையில், மற்றொரு பக்கம் காஷ்மீரிகள் மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று இந்துத்துவ பிரசார பீரங்கிகள் முழங்கி கொண்டிருந்தன. இதற்கிடையில் 5,00,000 அமர்நாத் யாத்ரிகர்கள் சின்ன காயம் கூடப்படாமல் யாத்திரையை முடித்தனர். மாறாக, உள்ளூர் மக்களின் விருந்தோம்பலை அவர்கள் பெற்றனர்.ஆச்சரியமளிக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்த அரசு, நிலம் வழங்குதலை ரத்து செய்தது. மூத்த பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா ஜீலானி ‘நிலம் வழங்குதல் ஒரு பிரச்னையே அல்ல’ என்று கூறியதற்குப் பிறகும், மேற்கண்ட எதிர்ப்பு கிளம்பியிருந்தது.நிலம் வழங்குதல் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஜம்முவில் போராட்டங்கள் வெடித்தன. அங்கும்கூட, இந்த பிரச்னை எதிர்பாராத வகையில் பெரிதாக மாறியது. இந்திய அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், ஒடுக்குவதாகவும் இந்துக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரே சாலைத் தொடர்பு இது. ராணுவம் அழைக்கப்பட்டது. ஜம்மு ஸ்ரீநகர் இடையே சாலைப் போக்குவரத்து பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரி லாரி ஓட்டுநர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்ததாக பஞ்சாப் பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்தன. இதன் விளைவாக, லாரி ஓட்டுநர்கள் உயிருக்கு பயந்து, நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட மறுத்தனர். எளிதில் அழுகிவிடக் கூடிய பழங்கள் மற்றும் பள்ளத்தாக்கு உற்பத்திப் பொருட்கள் லாரிகளிலேயே அழுக ஆரம்பித்தன. சாலையை தடை செய்த இந்துத்துவவாதிகளின் நடவடிக்கை சூழ்நிலையை கட்டுமீறிப் போகச் செய்தது. நேர் எதிராக ‘சாலை தடை அகற்றப்பட்டுவிட்டது, லாரிகள் சென்று வருகின்றன’ என்று அரசு அறிவித்தது. இந்திய ஊடகங்களில் ஒரு பிரிவு, உறுதியான உளவுத் துறை தகவல்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி, இந்த சாலைத் தடை ரொம்பச் சிறியது என்றும், அப்படி ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வந்தன. ஆனால் இது போன்று விளையாடி கொண்டிருக்க இனியும் நேரமில்லை. ஏற்கனவே தேவையான ளவு சேதம் உருவாக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு மிக மோசமாக அவதிப்பட்டுவிட்டனர். ராணுவ முற்றுகை, பசி, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்டுகள் தட்டுப்பாடு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அவர்கள், பேசாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம். உண்மையான தடைகற்கள் சாலையில் ஏற்பட்டதல்ல, இங்கே கூறியது போல உளவியல் ரீதியில் ஏற்படுத்தப்பட் ஒன்றுதான். ஏனென்றால் இந்தியா காஷ்மீர் இடையிலான கடைசி மெல்லிய தொடர்பு இழையும் துண்டிக்கப்பட்டிருந்தது.லட்சக்கணக்கான ஆயுதமற்ற மக்கள தங்கள் நகரங்கள், தெருக்கள், மொக்கல்லாக்களை மீட்டெடுக்க தெருவில் இறங்கிவிட்டனர். பயங்கர ஆயுதங்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையிலுஞம், நெஞ்சுரத்துடனும் கூடினர். காஷ்மீரில் எழுந்த காதை அடைக்கும் பெரும் கர்ஜனையை அமைதிப்படுத்த இந்திய அரசு மிகக் கடினமாக முயன்றது.ராணுவ முகாம்கள், சோதனை சாவடிகள், பதுங்கு குழிகளின் தேசமாகவும், சித்திரவதைக் கூடங்களில் இருந்து ஓலங்கள் ஒலிக்கும் நேரத்திலும் மக்கள் போராட்டத்தின் உண்மையான சக்தியை இளம் தலைமுறை திடீரென்று கண்டெடுத்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக கௌரவமாக தங்கள் தோள்களை நிமிர்த்தி, தங்களுக்காகவும், தங்கள் மக்களுக்காகவும் போராட அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்களைப் பொருத்தவரை இந்த தருணம் கடவுள் தங்கள் முன் தோன்றி வரம் தரத் தயாராக இருக்கும் தருணம் போன்றது. அவர்கள் முழுவீச்சுக்சுடன் இருக்கின்றனர். மரணம்கூட அவர்களது முன்னேற்றத்குக்கு முற்றுப்புள்ளி வைக்காது. மரண பயம் போய்விட்ட பிறகு, உலகிலேயே மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை முன்னிறுத்தி என்ன பிரயோஜனம்? இதில் என்ன பயணம் வேண்டிக் கிடக்கிறது? காஷ்மீர் மக்கள் இன்று கையாளும் சாத்வீக போராட்ட முறையைக் கையாண்டுதான் தாங்களும் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை இந்தய மக்களைத் தவிர வேறு யார் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்?காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள மக்கள் எழுச்சி, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றோ அல்லது தீவிரவாதிகளின் வற்புறுத்தலால் மக்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றோ புளித்துப்போன பழைய வாதத்தை முன்வைக்க முடியாமல் முடக்கியது. 30கள் தொடங்கி ‘காஷ்மீரி உணர்வை’யர் சரியாக வெளிப்படுத்தினார்கள் என்ற கேள்வி சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. அப்படி வெளிப்படுத்தியது ஷேக் அப்துல்லாவா? இஸ்லாமிய மாநாட்டு கட்சியா? இன்று யார் அதை வெளிப்படுத்துகிறார்கள்? முன்னணி அரசியல் கட்சிகளா? ஹ§ரியத்தா? தீவிரவாதிகளா? கேள்விகள் நீள்கின்றன.இதற்கு முன்பாகவும் பெரும் பேரணிகள் நடந்துள்ளன என்றாலும், இந்த முறை மக்கள் முழு சக்தியை வெளிப்படுத்தி போராடியதை உணர முடிந்தது. சமீபகாலத்தில் இவ்வளவு நீண்ட காலத்துக்கும், பரவலாகவும் மக்கள் போராட்டம் நடக்கவில்லை. இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களால் மிகவும் பாராட்டப்பட்ட காஷ்மீரின் இரண்டு முன்னணி அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சிம் வீதிகளில் இறங்கி போராடுவதற்கான துணிச்சலை பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களிப்பவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில், புதுதில்லியில் உள்ள தொலைக்காட்சி அரங்குகளில் நடந்த விவாதங்களில் கடமைக்கு பங்கேற்பதே அந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான அடக்குமுறைக்கு இடையே விடுதலை வேள்வியை தீவிரவாதிகள் முன்னெடுத்து சென்று கொண்டிருந்த நிலையில், இன்று அவர்கள் பின்தங்கி விட்டனர். ஒரு மாற்றத்துக்காக இப்போது மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.பேரணிகளில் பேசிய பிரிவினைவாதத் தலைவர்கள், தலைவர்களாக இருந்தது மட்டுமின்றி, காஷ்மீரின் தெருக்களில் கொதித்தெழுந்த சீற்றம் மிகுந்த மக்களின் மாபெரும் சக்தியால் வழிநடத்தப்பட்டு, அதைப் பின்பற்றி நடக்கும் தொண்டர்களாகவும் இருந்தனர். முழுமையான புரட்சியை ஏற்று நடத்தும் தலைவர்களாக அவர்கள் இருந்தனர். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான். மக்கள் விரும்பாதவற்றை பொது இடத்தில் கூற நேரிட்டால், பின்னர் கௌரவமாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். ‘தற்போது உருவாகியுள்ள மக்கள் இயக்கத்தின் ஒரே தலைவர் நான்தான்’ என்று சமீபத்தில் ஒரு பேரணியில் அறிவித்துக் கொண்ட சையது அலி ஷா ஜீலானி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். எளிமையாக உடைந்துவிடக்கூடிய பல்வேறு சக்திகள் போராட்டத்தில் ஒருங்கிணைந்த நிலையில், அவரது கருத்து மிகப்பெரிய அரசியல் பிழை. ஒரு சில மணி நேரத்தில் கருத்தை அவர் மறுதலித்தார். விரும்புகிறோமா இல்லையோ, இதுதான் ஜனநாயகம். எந்த ஜனநாயகவாதியும் போலியாக நடித்து தப்பிக்க முடியாது.ஒவ்வொரு நாளுக்குப் பிறகும், பயங்கரமான நினைவுகள் நிழலாட ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களை மொய்க்கத் தொடங்கினர். பதுங்கு குழிகளை தகர்த்தனர். தடைகளை உடைத்தனர். ராணுவ வீரர்களின் இயந்திரத் துப்பாக்கிகளை நேருக்குநேர் சந்தித்து, இந்தியாவில் சிலர் மட்டும் விரும்பும் விஷயத்தை கூறினர். ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்றும், அதே அளவு எண்ணிக்கையிலும், அதே அளவு உக்கிரத்துடனும், ‘பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என்றும் அவர்கள் கோஷமிட்டனர். தகரக் கூரையில் படபடவென்று வீழ்ந்து தெறிக்கும் மழையின் ஒலியைப் போலவும், மின்னல் தாக்குவதற்கு முன் ஒலிக்கும் இடியின் ஓசை போலவும் பள்ளத்தாக்கில் இந்த கோஷங்கள் அதிர்ந்து ஒலித்தன. காஷ்மீர் மக்களிடம் நடத்தப்படாத ஒரு வாக்கெடுப்பின், நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு இந்த கோஷங்கள்.ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பக்ஷி மைதானத்தின் காலி இருக்கைகளில் ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சில அதிகாரிகள் முன்னிலையில் ஆளுநர் என்.என்.வோரா கொடியேற்றினார். ஒரு சில மணி நேரத்துக்குப் பின்னால், நகரத்தின் முக்கிய பகுதியான லால் சௌக்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர். ‘தாமதமான சுதந்திர தின வாழ்த்துகளை’ (ஏனென்றால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14), ‘அடிமைகள் தின வாழ்த்துக்களை’யும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும், காஷ்மீரின் அபு கிரெய்ப் வதைகூடங்களிலும், இப்படி நகைச்சுவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகஸ்ட் 16ம் தேதி பாம்போர் என்ற கிராமத்துக்கு 3,00,000 மக்கள் பேரணியாகச் சென்றனர். ஜந்து நாட்களுக்கு முன் மோசமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹ§ரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீசின் சொந்த கிராமம் அது. ஜம்முவுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒரே பாதை இந்துத்துவவாதிகளால் தடுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகர்முசாபராபாத் நெடுஞ்சாலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நோக்கி நடந்த பெரும் பேரணியில் அவர் கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு முன் அந்தச் சாலை சரக்கு, மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 18ம் தேதி, அதே எண்ணிக்கையில் திரண்ட மக்கள் ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி. மைதானத்தில் கூடி (அந்த அமைப்பு உண்மை மற்றும் அமைதி குழுவாகச் செயல்படவில்லை, சுற்றுலா வரவேற்பு மையல் போலவே செயல்பட்டது) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஜ.நா.ராணுவ கண்காணிப்பு குழுவிடம் மூன்று கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கொடுத்தனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐ.நா.அ¬திப் படையை முன்னிறுத்த வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ராணுவமும் காவல்துறையும் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறை செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கலகம் ஏற்படுவதற்கு ஐ.எஸ்.ஐ.யின் சிறு குழுதான் காரணம் என்று அரசு நம்புவதாகவும், இந்த அதிரகசிய உளவுத்துறை தகவலை தங்கள் செய்தி அலைவரிசைகளில் ஒளிபரப்புமாறு ஊடகங்களிடம் அரசு கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் மிகவும் அபத்தமாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு வழிகாட்டுதலை கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தன. அப்படி அபத்தங்களை ஒளிபரப்புவதற்கு மத்தியில் குறைந்தபட்சம், இந்த மக்கள் புரட்சி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறதே, அதற்காகவாவது மகிழ்ச்சியடையலாம்.ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, ஸ்ரீநகரில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. சாலைகளில் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்த தடைகளில் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகருக்கு செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டன. குப்கர் சாலையில் உள்ள ஐ.நா.ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்துக்கு பேரணியாகச் செல்லாமல் டி.ஆர்.சி.மைதானத்தில் உரையாற்றுமாறு 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஹ§ரியத் தலைவர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்தது. ஏனென்றால், ஸ்ரீநகரின் குப்கர் சாலையில்தான் தடைகளை ஏற்படுத்தி இந்திய நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு சௌகரியமாகவும், பகட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்தது.பள்ளத்தாக்கின் கிராமங்கள், நகரங்களில் இருந்து வந்த மக்கள் 18ம் தேதி காலை ஸ்ரீநகரில் குவியத் தொடங்கினர். டிரக், டெம்போ வேன், ஜீப், பஸ், கால்நடையாக என கிடைத்த வழிகளில் எல்லாம் வந்திருந்தனர். மீண்டும் தடைகள் உடைக்கப்பட்டன. மக்கள் தங்கள் நகரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதை எதிர்கொள்ள காவல்துறைக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று விலகியிருப்பது அல்லது மக்களை படுகொலை செய்வது, காவல்துறை விலகி நின்றது. ஒரு தோட்டாகூட சுடப்படவில்லை.நகரமெங்கும் அலைகடலென புன்னகை வீசியது. எங்கும் மகிழ்ச்சிப் பரவசம் பரவியிருந்தது. படகு இல்ல உரிமையாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் பதாகைகள் வீற்றிருந்தன. ‘நாங்கள் அனைவரும் கைதிகள், எங்களை விடுதலை செய்யுங்கள்’ என்றது ஒன்று. ‘மற்றொன்றோ, ‘சுதந்திரம் இல்லாத ஜனநாயகம் வெறும் பேய் பிடித்த ஒன்று’ என்றது. இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கூறுகளை வலுப்படுத்திக் கொள்ள, மதரீதியிலான படுகொலையை கையிலெடுத்துக் கொண்ட அவலத்தை மேற்கண்ட வாசகம் உணர்த்துகிறது. அத்துடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு, தன்னைத் தானே ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தையும் குறிப்பிடுகிறது.ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஒவ்வொரு சினார் மரத்தின் உச்சியிலும் பச்சைக் கொடி பறந்தது. அதில் இந்திய வானொலி நிலைய கட்டடத்தில் ஒரு கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஹஸ்ரத்பால், பத்மாலூ, சோபூர் ஆகிய வழிகாட்டி பலகைகள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி அல்லது பாகிஸ்தான் பாகிஸ்தான் வழிகாட்டிப் பலகைகளே அழிக்கப்படாமல் இருந்தன. பாகிஸ்தான் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள பாசம் என்ற பொது உணர்வு வெளிப்பாடு, பாகிஸ்தான் மீதான விருப்பத்துக்கு இணங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்று தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடும். இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் செயல்பாட்டை விடுதலைப் போராட்டம் என்று கருதுகின்றனர். இந்திய அரசோ தீவிரவாத பிரசாரமாகக் கருதுகிறது.பாகிஸ்தானை பெரும்பாலான காலம் சர்வாதிகாரிகள்தான் ஆண்டு வந்துள்ளனர்.தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இனக்குழுக்கள் இடையிலான போரால் தற்போது பிளவுண்டு கிடக்கும் பாகிஸ்தானிடம் இருந்து, காஷ்மீர் ‘விடுதலைப் போராட்டம்’ விலகிருயிருப்பதுதானே சரியாக இருக்கும் என்று கேள்வி எழுலாம். நேரெதிராக ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்தியாவை காஷ்மீர் மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர்.எங்கு பார்த்தாலும் பாகிஸ்தான் கொடிகள். எங்கு பார்த்தாலும் ‘பாகிஸ்தானுடன் எங்கள் பந்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’, ‘சுதந்திரம் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’ என்ற கோஷங்கள் ஒலித்தன.என்னைப் போன்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விடப் போகிறது என்று ஓர் இளம்பெண்ணிடம் கேட்டேன். அவர் தோள்களை குலுக்கி விட்டு, “இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்படுவதற்கான சுதந்திரத்தைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம், இல்லையா?” என்று பதிலிறுத்தாள். அவரது பதில் என்னை மௌனமாக்கியது.டி.ஆர்.சி.மைதானத்தில் பச்சைக் கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் நான் நின்றபோது, என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய இயல்பு கொண்ட எழுச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருக்கவே அல்லது அதை புறந்தள்ளாமல் இருக்கவோ முடியவில்லை. அதேநேரம் ஒரு கொடிய தீவிரவாதிகளின் ஜிகாத் என்றும் இதை முத்திரை குத்த முடியாது. காஷ்மீரிகளைப் பொருத்தவரை இது ஒரு தூய்மைப்படுத்துதல் நிகழ்வு. நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த சதந்திரத்துக்கான போராட்டத்தில், அதற்கே உரிய அனைத்து நேர்த்தியின்மைகள், கொடுமைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தக் கூடுகை ஒரு வரலாற்று திருப்புமுனை வாய்ந்த தருணம்.இந்தப் போராட்டம் மாசுபடாத ஒன்று எனக் கூறமுடியாது. இந்த மக்கள் எழுச்சியின் ஆரம்ப கட்டத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்பட்டது மற்றும் பள்ளத்தாக்கில் இருந்த ஒட்டுமொத்த பண்டிட் சமூகமும் வெளியேற்றப்பட்டதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கோஷங்களை நான் கவனமாக காது கொடுத்து கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால் பேச்சு அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தி, புரிதலுக்கான அனைத்து அம்சங்களையும் தருகிறது. காஷ்மீர் சாலை தடை செய்யப்பட்ட பிறகு ‘காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டிதான்’, ‘ரத்தம் தோய்ந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டை உடைப்போம், காஷ்மீரை ஒன்றிணைப்போம்’ என்றும், (இவை தவிர, இந்தியாவை அவமானப்படுத்தும்,, அவமதிக்கும் கோஷங்களும் இருந்தன), ‘ஒடுக்குபவர்களே, கொடியவர்களே, எங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’, ‘காஷ்மீர் எங்கள் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, காஷ்மீர் எங்களுடையது’ என்று அந்த கோஷங்கள் ஒலித்தன.ஒரு கோஷம் என்னை கத்தி போல் வெட்டி, எனது இதயத்தை உடைத்தது, ‘பிச்சையெடுக்கிறது நிர்வாண இந்தியா, பாகிஸ்தானிலோ வாழ்க்கை சௌகரியமான ஒன்றுதான்’ என்றது அந்த கோஷம்.இந்த கோஷம் சகப்பதானதாகவும், கேட்க வலி மிகுந்ததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? இதைப் புரிந்து கொள்ள நான் முயற்சித்தேன். மூன்று காரணங்கள் தென்பட்டன. முதலாவது, இந்த கோஷத்தின் முதல் பகுதி மிகவும் கவலையளிக்கக் கூடியது, ‘வல்லரசாக உயர்ந்து வரும்’ இந்தியாவின் உண்மையான முகத்தை சுட்டுகிறது.இரண்டாவது, இந்தியர்கள் அனைவரும் நிர்வாணமாக, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, பல்வேறு சிக்கலான, வரலாற்று ரீதியில் கொடூரமான பண்பாட்டு மற்றும் பொருளாதார அமைப்புகள் இந்திய சமூகத்தை கொடூரமானதாகவும், இழிவான ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளன. மூன்றாவதாக, மிகவும் அவதிப்பட்ட காஷ்மீர் மக்கள், அதற்கு சற்றும் குறையாத வகையில் அதே ஒடுக்குபவரால் (இந்தியாவால்) பல்வேறு வகைகளில் அவதிப்படுபவர்களைப் பார்த்து கிண்டல் செய்வதைக் கேட்பது வலி மிகுந்த ஒன்றுதான். இந்த கோஷத்தில் இருந்து பாதிக்கப்படுவர்களே எப்படி குற்றம்புரிபவர்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.மரிவாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா ஜீலானி பேரணிக்கு வந்தபோது அவர்களுக்கு கூறப்பட்ட வாழ்த்தொலிகள் காதுகளை நிறைத்தன. ‘ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும், சிறையில் அடைக்கப்படவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவும் காரணமாக இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தொந்தரவுக்கு உள்ளான பகுதிகள் சட்டம், மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும்’ என்று மிர்வாய்ஸ் உமர் பாரூக் பேசினார். சையது அலி ஷா ஜீலானி, ‘குரான்தான் நமக்கு வழிகாட்டும். பாகிஸ்தான் காஷ்மீருடையது, அதைப் போலவே காஷ்மீர் பாகிஸ்தானுடையது.’ என்ற வகையில் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்தது.இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகள் தங்களது மாறுபட்ட பார்வைகளுக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கருத்து, காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்பது ஜீலானியின் விருப்பம், மிர்வாய்ஸ் உமர் பாரூக்கோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளார்.சிவப்பு கண்கள் மினுமினுக்க என் அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் கூறினார், “காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்களிக் கொண்டன. எங்களுக்கு சுதந்திரம்தான் தேவை” என்றார். புதிய பங்கீட்டு விதியின்படி, இவர் கூறுவதை யாராவது கேட்பார்களா? இந்திய சமவெளிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் கர்ஜித்துக் கொண்டு ஓடிய லாரிகளின் உரிமையாளர்களும், அதை ஓட்டிய மனிதர்களுக்கும் வரலாறு பற்றியோ அல்லது காஷ்மீரைப் பறறியோ தெரியுமா என்று கூறமுடியவில்லை. இருந்தபோதும் லாரிகளின் பின்புறத்தில் அவர்கள் பதித்திருந்த தகடுகளில் “பாலைக் கேட்டால், வெண்ணெய் தருவோம், காஷ்மீரைக் கேட்டால், உன்னை இரண்டாகப் பிளந்துவிடுவோம்” என்று எழுதியிருப்பது குறித்து அந்த முதியவருக்குத் தெரியுமா?இந்த இஸ்லாமிய சக்தியின் இடத்தில் இந்துத்துவ சக்திகளைப் பொருந்திப் பார்த்தேன். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பயங்கரக்கனவாகத் திகழும், ‘கனவு இந்தியா’வின் தோற்றம் என் முன்னால் வந்தது.‘இதுதான் நமது எதிர்காலம்’ என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ‘முழுமையான வாழ்க்கையின் வழி’ என்ற பெயரில் ஒற்றை மதத்தை பின்பற்றும் அரசுகளின் கையில் சமூக, ஒழுக்க விதிமுறைகளை ஒப்படைக்க வேண்டுமா? இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் இந்துத்துவ திட்டத்தை நிராகரிக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் நிலவும் அன்பு, ஆர்வம், குறைகாணாத போக்கு, பெருமளவு உணர்ச்சிவசப்படும் குணங்களில் இருந்து இந்த நிராகரிப்பு உருவாகிறது. நமது அண்டை அயலார் என்ன செய்கிறார்கள், பிரச்சினைகளை எப்படி கையாளுகிறார்கள் என்ற அம்சங்கள் நமது வாதத்தை மாற்றுவதில்லை. மாறாக அது நமது வாதத்தை பலப்படுத்தவே செய்கிறது. அதேநேரம் இப்படி அன்பால் உருவாகும் வாதங்கள், ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். (ஏனென்றால் குழப்பளிக்கும் வகையில் இந்துத்துவ கொள்கைக்கு எப்படி இந்துகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்). வன்முறை ஆபத்துகள் அடங்கிய நிலையில், பல்வேறு பார்வைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்தை கூறி விவாதிக்கவும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த வகையான சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வருகிறோம் என்பது பற்றிய சித்திரத்தை இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இப்போது தெளிவாக்க வேண்டும்.தியாகிகள், கோஷங்கள், மேம்போக்கான பொதுமைப்படுத்துதல்களைத் தாண்டி இவர்கள் மக்களுக்கு எதையாவது கொடுத்தாக வேண்டும். குரானை வழிகாட்டியாகக் கொள்ளும் விருப்பமுடையவர்களுக்கு அங்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று விரும்புபவர்கள் அல்லது குரானை வழிகாட்டியாக கொள்ளாதவர்கள் என்ன செய்வது? ஜம்முவில் உள்ள இந்துகள் மற்றம் இதர சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்குமா? தற்போது வெளியேறி மோசமான வறுமையில் வாடும் லட்சக்கணக்கான பண்டிட்டுகள், தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைக்குமா? அவர்கள் சந்தித்த மோசமான இழப்புகளுக்கு நஷ்டஈடு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 61 ஆண்டுகளாக காஷ்மீரிகளுக்கு இந்தியா செய்து வந் விஷயத்தையேதான், சுதந்திர காஷ்மீரும் சிறுபான்மையினருக்குச் செய்யுமா? அப்படியானால் ஓரினச்சேர்க்கையாளர்கள், கலப்படம் செய்பவர்கள், கடவுளை பழிப்பவர்களின் கதி என்னாகும்? இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் ஒழுக்க விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் திருடர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் என்ன ஆவார்கள்? சௌதி அரேபியாவைப் போல கொல்லப்படுவார்களா? மரணம், ஒடுக்குதல், அடக்குமுறை, படுகொலை என்ற துர்சுழற்சி இதற்குப் பிறகும் தொடருமா? காஷ்மீரின் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து அறிய வரலாறு பல்வேறு மாதிரிகளை முன்வைத்திருக்கிறது. அவர்களது கனவு காஷ்மீர் எப்படியிருக்கும்? அல்ஜீரியா, இரான், தென்னாப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான்... இவற்றில் எதைப் போன்றிருக்கும்?இந்த நெருக்கடியான தருணத்தில், கனவுகளைவிட வேறு சில விஷயங்களும் மிக முக்கியமானவை. சூழ்நிலையை தெளிவாகவும், நேர்மையாகவும் கணிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் அறிவுச் சோம்பலையோ, தயக்கத்தையோ இந்தத் தருணத்தில் வெளிப்படுத்தக் கூடாது. 1947ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் செய்த பித்தலாட்டம் காஷ்மீரின் நவீனகால சோகம் என்றும், அதன் காரணமாகத்தான் இப்படி நினைத்துப் பார்க்க இயலாத படுகொலைகள் நிகழ்ந்தன. கிட்டத்தட்ட சுதந்திரமாக இருந்த மக்கள் நீண்டகால அடிமையாக இருக்க நேரிட்டது என்றும் யாராவது வாதிடலாம்.இதற்கிடையில் பிரிவினைவாத பிசாசு ஏற்கெனவே தலைதூக்கிவிட்டது. பள்ளத்தாக்கில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். வெளியேற்ற தூண்டப்படுவார்கள் என்று இந்துத்துவ அலைவரிசைகளில் புரளி பரவி வருகிறது. அதற்கு பதிலடியாக, ஜம்முவில் ஆயுதமேந்திய இந்து தீவிரவாதிகள் படுகொலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் இரண்டு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட கொடூர நினைவுகள் மீண்டும் நினைவில் ஆடுகின்றன. அந்த கொடும் கனவு எப்பொழுதும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.மீண்டும் அதே வரலாறு இங்கும் நிகழும் என்று எதிர்பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நிகழாதவரை, அதை நம்பத் தேவையில்லை. மேலும் அப்படிப்பட்ட கொந்தளிப்பை உருவாக்க மக்கள் வேறு வகையில் தீவிரமாக செயலாற்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த பயங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த மக்களையும், காஷ்மீரையும் தொடர் ராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. ‘சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை, அதனால்தான் சுதந்திரம் வழங்கவில்லை’ என்று காலனி ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய பழைய வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது.இந்திய அரசு காஷ்மீரின் மீது வைத்துள்ள பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் இந்தியா செய்து பார்க்கும். உறுதியான திட்டம் வகுக்கப்படாத நிலையில் தற்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி மங்கிவிட வாய்ப்புள்ளது. தற்போது உருப்பெற்று வரும் எளிதில் உடைந்துவிடக்கூடிய கூட்டணியை உடைப்பதற்கு அது வழிகோலும். தற்போது எழுந்துள்ள சாத்வீக எழுச்சி மறைந்து, ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீண்டும் போராடுவதற்கு அழைக்கப்படலாம். தற்போது 5 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது 10 லட்சமாக மாற்றக்கூடும். சில தந்திரமான படுகொலைகள், இரண்டொரு திட்டமிட்ட படுகொலைகள், சில காணாமல் போகச்செய்தல்கள், ஒட்டுமொத்த கைது போன்றவை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த மந்திர ஜாலத்தை நீட்டிக்கக்கூடும்.காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்படும் அளவு கொள்ளாத மக்கள் வரிப்பணம், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் வறுமையில் உழலும் மக்களுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும், உணவுக்காகவும் செலவிட வேண்டியவை. அதிக ஆயுதங்கள், அதிக தடையேற்படுத்தும் வேலி கம்பிகள், காஷ்மீரில் சிறைகளுக்குச் செலவிடுவது சரியான ஒரு நடவடிக்கை என்று இந்திய அரசு எப்படி நம்புகிறது என்று புரியவில்லை.காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு நாம் அனைவரையும் அரக்கர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்து ஆதிக்கவாதிகள் தாக்குவதற்கு உள்ள ஆபத்தான வாய்ப்பு, காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தடை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் மிகுந்த சதித்திட்டம் நேரடியாக நமது ரத்தநாளங்களில் செலுத்தப்பட்டு அவ்வப்போது இடையீடுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது.இத்தனைக்குப் பிறகும் நம் அனைவரது மனசிலும் ஓர் நியாயமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களின் விடுதலையை பறிக்க எந்த அரசாவது ராணுவ படையை பயன்படுத்த உரிமை உண்டா?காஷ்மீரை இந்தியா விட்டொழிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதும் மிகமிக முக்கியம்.தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி ‘அவுட்லுக்’ இதழ்)